search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mass stabbing attack"

    ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். 

    இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாகவும், மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குத்ல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×