search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"

    • எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
    • பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

    இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.

    பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
    • பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    • இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
    • தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது.

    குடியரசு தின விழா முடிந்த மூன்றாவது நாள் அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் இன்று நடைபெற்றது.

    முப்படைகளை சேர்ந்த வீரர்கள் இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில போலீசார், மத்திய போலீசார், ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர்.

    தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது. இதனை காண, ஏராளமான மக்கள் விஜய் சவுக் பகுதிக்கு வருகை தந்தனர். வசுதேவ குடும்பகம் வடிப்பில் இந்த அணி வகுப்பானது நடைபெற்றது.

    • தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்.
    • குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.

    நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து, பார்வையாளர் அரங்கில் இமானுவேல் மேக்ரானை வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் அதிபர், "இந்நிகழ்வு பிரான்ஸ்-க்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நன்றி இந்தியா" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • குடியரசு தினவிழா முன்னிட்டு ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன.
    • பிரான்ஸ் படைவீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

    இந்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினார். தலைமை சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்து கொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்ற பிறகு, கண்கவர் அணிவகுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்டிர பவனில் இருந்து புறப்பட்டார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடனிருந்தார்.

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்டு இந்திய இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தினார்கள்.

    தேசியக்கொடியை பறக்கவிட்டபடி Mi-17IV ஹெலிகாப்டர்

    நான்கு Mi-17IV ஹெலிகாப்டர்கள் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு வானில் சென்றன.

    சக்ரா விருதுகள் வாங்கிய அதிகாரிகள் அணிவகுப்பு

    மிக உயர்ந்த வீர வீருதுகளான பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற அதிகாரிகள் அணிவகுபபு நடைபெற்றது.

    குதிரைப்படை அணிவகுப்பு

    பிரான்ஸ் வீரர்கள் அணிவகுப்பு

    டி-90 பீஷ்மா டாங்கிகள் அணிவகுப்பு

    பாதுகாப்புப்படையின் அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு

    பீரங்கி படைப்பிரிவின் பினாகா படைப்பிரிவின் அணிவகுப்பு

    பழமையான காலாட்படையின் மெட்ராஸ் படைப்பிரிவின் அணிவகுப்பு

    முப்படையில் உள்ள வீராங்கனைகளின் அணிவகுப்பு

    ஆயுதப்படை மருத்துவக்குழுவின் அனைத்து பெண்கள் பிரிவு அணிவகுப்பு

    இந்திய விமானப்படை அணிவகுப்பு

    முதன்முறையாக இடம்பெற்ற பெண்கள் பாதுகாப்புப்படையின் இசைக்குழு

    இந்திய விமாப்படையின் சிறப்பை விளக்கும் காட்சி வீடியோ

    டெல்லி பெண் போலீசின் இசைக்குழு முதன்முறையாக பங்கேற்றது

    பெண் அதிகாரித்தை பிரதிபலிக்கும் வகையில் பெண் வீராங்கனைகளின் அணிவகுப்பு

    • 21 பீரங்கி குண்டு முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி.
    • முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    முன்னதாக கொடியேற்றும் இடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் வருகைத் தந்தார். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தலைமை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

    • வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும்.
    • நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இது மாற்றத்திற்கான தருணம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். 140 கோடி இந்தியர்களும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் அஞ்சலி. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விற்கு நாம் அனைவரும் சாட்சியாக விளங்குகிறோம்.

    நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும். நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அறிஞர்கள் குறித்து நாம் எப்போதுமே பெருமைக் கொண்டிருக்கிறோம்.

    இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது புதிய சாதனைகளை படைத்து வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐ.நா. தலைவர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.
    • ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 வது கூட்டத்தொடரின் தலைவராக பதவி வகிப்பவர் டென்னிஸ் பிரான்சிஸ். இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர், டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்தார்.

    ஐ.நா பொதுச்சபையின் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற முர்மு, காலநிலை மாற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    • பால் புரஸ்கார் விருதுக்கு தேர்வான சிறுவர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதினை வழங்கினார்.
    • விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது.

    தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு கலை மற்றும் கலாசாரத் துறை, துணிச்சல் சமூக சேவை மற்றும் விளையாட்டு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 19 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

    இந்நிலையில், பால் புரஸ்கார் விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    • இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுக்கு பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.
    • குடியரசு தலைவராக திரவுபதி முர்மு உருவாவதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய - அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுக்கு பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர் என நான் நம்புகிறேன். குடிமக்களாக நாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தி நமக்கு உள்ளது. எனவே இந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களின் குரலையும் வாக்கையும் ஓங்கி ஒலிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார். மேலும், அமைச்சரவையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு உருவாவதற்கு மோடி காரணம் என்றும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு தொடர்ந்து பலப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

    கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, பாடகி மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன'பாடி, பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
    • கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    புதுடெல்லி:

    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.

    விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

    ×