search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரீட்"

    • தடுப்பு சுவரை இடித்துவிட்டு காங்கிரீட் சுவர் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை
    • யானை கூட்டம் விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி உடையார்கோ ணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வரு கிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அட்டகாசம் செய்யும் யானைகள் தோவாளை கால்வாயில் உள்ள பாலத்தின் வழியாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தடுப்பு சுவர்களை இடித்து தள்ளி விட்டு காட்டு யானை களுக்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மீண்டும் யானை கூட்டம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் நேரடி யாக சென்று விசாரணை மேற்கொண்டு சேதமடைந்த வாழை மற்றும் தென்னை களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் யானை வராமல் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதா வது:-

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியில் வாழை, தென்னை மரங்க ளை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. 3,4 யானைகள் கூட்டமாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிக்கு காட்டு யானைகள் வருவதை தடுக்கும் வகையில் தோவாளை பாலத்தின் மேல் தடுப்புசுவர் கட்டப் பட்டுள்ளது.

    அந்த தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு தற்போது யானை விளை நிலங்களுக்குள் புகுந்துள் ளது. தற்பொழுது அந்த பகுதியில் தடுப்பு சுவரை அகற்றி விட்டு காங்கிரீட் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பகுதியை அடைத்து விட்டால் யானை கூட்டம் விளைநிலங்கள் புகுவதை தடுத்து விடலாம்.

    மேலும் யானை வராமல் தடுக்கும் வகையில் அகழி வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். வனத்துறை அதிகாரிகள் பாலத்தின் மேல் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் வரை அங்கேயே முகாமிட்டு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். பொது மக்கள் அச்சப்பட தேவை யில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×