search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுவண்டி பந்தயம்"

    • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    சாயல்குடி

    கடலாடி நகர் தேவர் உற வின்முறைக்கு பாத்தியப் பட்ட பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 116-ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு வருகிற 28-ந் ேததி ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழுவினர் சார்பில் மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராம நாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி நகர் தேவர் உறவின்முறை தலைவர் சக்திவேல் முன்னிலை வகிக்கிறார். மாட்டு வண்டி பந்தயத்தை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவரும் கடலாடி ஒன்றிய அ.தி.மு.க. குழு தலைவரு மான முனியசாமி பாண்டியன் போட்டியை நடத்தி வைக்கிறார்.

    பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்த யத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனிய சாமி தொடங்கி வைக்கிறார். சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    • செல்வகுமாருக்கும் - அவரது உறவுக்கார பெண்ணான ஆனந்தலட்சுமிக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    விளாத்திகுளம்:

    தமிழகத்தில் பெரும்பாலும் தென்மாவட்ட பகுதிகளான தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிகளவில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் கோவில் கொடை, ஈஸ்டர் பண்டிகை, சந்தனக்கூடு திருவிழா, தலைவர்கள் பிறந்தநாள் என அனைத்து விழாக்களுக்கும் அதிக அளவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற மாட்டு வண்டி பந்தய வீரர், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயங்களில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.

    இந்த நிலையில் செல்வகுமாருக்கும் - அவரது உறவுக்கார பெண்ணான ஆனந்தலட்சுமிக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இதையொட்டி மாட்டு வண்டி பந்தயத்தின் மீது கொண்ட தீரா காதல் கொண்ட செல்வக்குமார், தனது திருமணத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தி சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்று எண்ணி அவரது திருமணத்திற்கு மறுநாளே 4-ந் தேதி அவரது சொந்த ஊரான அரியநாயகிபுரத்தில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கோரியுள்ளார். ஆனால் போலீசார் 4-ம் தேதி மாட்டுவண்டி பந்தயத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் இருப்பதாக கூறி போட்டி நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, தனது திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது தனது நீண்ட நாள் கனவு என்பதை எடுத்துரைத்து செப்டம்பர் 6-ம் தேதியான கிருஷ்ண ஜெயந்தியன்று விடுமுறை தினத்தில் போட்டிகள் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.

    பின்னர் உட்கோட்ட காவல்துறையினர் மாட்டு வண்டிகள் பந்தயத்தை நடத்த அனுமதி அளித்ததையடுத்து நேற்று காலை அரியநாயகி புரத்தில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    இப்போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி, தனது திருமணத்தை முன்னிட்டு செல்வக்குமார் நடத்திய மாட்டுவண்டி பந்தயத்தில் சின்ன மாட்டுவண்டிகள் பிரிவில் பங்கேற்ற பந்தய வீரரும், புதுமாப்பிள்ளையுமான செல்வகுமார் 3-ம் இடத்தை பிடித்து வெற்றிப்பெற்றுள்ளார்.

    செல்வகுமாரை மாட்டுவண்டி பந்தய வீரர்கள், ரசிகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் பாராட்டி வாழ்த்திச்சென்றனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் தேவ ரம்பூர் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எல்கை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்ற பெரிய மாடு களுக்கு தேவரம்பூர் விலக்கு ரோட்டில் இருந்து 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் விழா குழு வினரால் நிர்ணயம் செய்யப் பட்டது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராம்நாடு, தேனி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்ட னர். இதில் முதல் பரிசாக பரவை நகரத்தைச் சேர்ந்த முத்து தேவருக்கும், 2-ம் பரிசாக பூக்கொள்ளை காளிமுத்துக்கும், 3-வது பரிசை பரளி கிராமத்தைச் சேர்ந்த கேரளா பிரதர்சும் பெற்றனர். நினைவு பரிசை தேவரம்பூர் கிராமத்தை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டது. அதே போல் சின்ன மாட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் முதல் பரிசை குண்டேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த கனக வல்லி, 2-ம் பரிசை தேவரம் பூர் கிராமம் ராமநாதன், 3-ம் பரிசை தேவரம்பூர் கிராமம் சுதாகர், 4-ம்பரிசை பொய்கரைபட்டி பாலு ஆகியோருக்கும் விழா குழுவினரால் வழங்கப்பட் டது.

    மேலும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகளும் சாரதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடு களை தேவரம்பூர் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இப் பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர் களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தில் மொட்டை இருளப்பசுவாமி கோவில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கள்ளக்காரி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது.

    போட்டி காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிவரை நடந்தது. இதில் 7 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 29 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இதில் மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் பங்கேற்றன.

    ரேக்ளா பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கமும் அதனுடன் ஒரு பெரிய வெள்ளாடும் பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகள் மற்றும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மனின் கோவில் 89 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்த யத்தில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    நடு மாடுகளுக்கு சிவகங்கை சாலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்) அருகில் இருந்து தானிப்பட்டி வரையில் 7 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி களுக்கு க.பிள்ளையார்பட்டி விலக்கு வரை 5 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடந்தது.

    சீறி பாய்ந்து சென்ற காளைகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றன. அப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சாரதி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ரசிகர்களும், பொதுமக்களும் நின்று ஆரவாரத்துடன் போட்டி யை கண்டு ரசித்தனர்.

    நடுமாடு பிரிவில் இலங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி 2-வது பரிசும், சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

    பூஞ்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் முதல் பரிசும், கனகவள்ளி 2-வது பரிசும், பூண்டி கேசவன் 3-வது பரிசும் பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலையில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு 3-வது பரிசும் பெற்றனர். சிறிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொ ண்டன. இதில் அவனி யாபுரம் மோகன்சாமி முதல் பரிசும், புதுப்பட்டி மணி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமை யாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்களுக்கும் ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டி கண்ட தேவி ஊரணியை சுற்றி சுற்றுப்பந்தயமாக நடந்தது.

    இதில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு ஊரணியை 7 சுற்றுகளும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 சுற்றுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாடு பர்மா காளி, 2-வதாக புதுக்கோட்டை மாவட்டம் பரளி கணேஷ், 3-வதாக சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், 4-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்திகோட்டை கருப்பையா, 5-வதாக தினையாகுடி சிவா மாடுகள் வெற்றி பெற்றன.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 22 ஜோடிகளை 2 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டது. முதல் சுற்றில் முதலாவதாக தேவகோட்டை குறிஞ்சி மளிகை ஸ்டோர், 2-வதாக தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், 3-வதாக மாத்தூர் குமார், 2-வது சுற்றில் முதலாவதாக துறை யனூர், 2-வதாக மேலூர் சூரக்குண்டு, 3-வதாக பீர்க்கலை காடு மாடுகள் வெற்றி பெற்றன.

    வெற்றிபெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு, மாலைகள் அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் நடந்த ஆடி திருவிழாவில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு முளைக்கொட்டுதல் நடந்தது. நேற்று காலை கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஆடி திருவிழாவையொட்டி இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேவகோட்டை பிரசாத் மொபைல், 2-வதாக நல்லாங்குடி முத்தையா சேர்வை, 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக சாத்தம்பத்தி சரவணன் மாடுகள் வெற்றி பெற்றன.சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது காரைக்குடி கருப்பண்ண சேர்வை, 2-வதாக சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, 3-வதாக கண்டதேவி மருதுபிரதர்ஸ், 4-வதாக மயிலாடுவயல் செல்வராஜ் எஸ்.பி.பட்டணம் உமர் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை, வேட்டி, துண்டுகள், ரொக்க பரிசுகள், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்.

    • ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கொக்கன் கருப்பர் சுவாமி கோவில் ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு 26-ம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இந்த பந்தயத்தில் பெரியமாடு 8 மைல் தூரமும், சின்னமாடு 6 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது. முதலில் 11 பெரியமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னாள் தடயவியல் துறை இயக்குநர் (ஓய்வு) விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி ஆகியோர் கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல்பரிசாக பரவை அம்மாபொண்ணு கார்த்திகேயனுக்கு ரூ.15 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக சிங்கம்புணரி காஞ்சனாதேவிக்கு ரூ.14 ஆயிரத்து 26, 3-ம் பரிசாக பட்டிவீரன்பட்டி முரளிதரனுக்கு ரூ.13 ஆயிரத்து 26 ம், 4-ம் பரிசாக மட்டங்கிபட்டி காவியாவுக்கு ரூ.6 ஆயிரத்து 26ம் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக கல்லனை விஸ்வா ரவிச்சந்திரனுக்கு ரூ.14 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக மேலமடை சீமான் பாண்டியராஜனுக்கு ரூ.13 ஆயிரத்து 26-ம் , 3-ம் பரிசாக சிங்கம்புணரி செந்தில்குமாருக்கு ரூ.12 ஆயிரத்து 26ம், 4-ம் பரிசாக பாதரக்குடி வளர்மதிக்கு ரூ.5 ஆயிரத்து 26 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    போட்டியில் சீறிப்பாய்ந்த மாடுகள் இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. இதில் வெற்றிபெற்ற முதல் 4 மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், பரிசுத்தொ கைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறியமாடுகள் 12 எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று கண்டுகளித்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் அம்பலகாரர் பார்த்தி பன், தனம் பிரிக்ஸ் சேவுகப்பெருமாள், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணைச்சே ர்மன் இந்தியன் செந்தில் மற்றும் எட்டுக்கரை இளைஞர்கள் பங்காளிகள் செய்திருந்தனர்.

    ×