search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு  இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
    X

    போட்டியில் பங்கேற்ற மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்து சென்ற காட்சி.

    ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

    • ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கொக்கன் கருப்பர் சுவாமி கோவில் ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு 26-ம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இந்த பந்தயத்தில் பெரியமாடு 8 மைல் தூரமும், சின்னமாடு 6 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது. முதலில் 11 பெரியமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னாள் தடயவியல் துறை இயக்குநர் (ஓய்வு) விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி ஆகியோர் கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல்பரிசாக பரவை அம்மாபொண்ணு கார்த்திகேயனுக்கு ரூ.15 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக சிங்கம்புணரி காஞ்சனாதேவிக்கு ரூ.14 ஆயிரத்து 26, 3-ம் பரிசாக பட்டிவீரன்பட்டி முரளிதரனுக்கு ரூ.13 ஆயிரத்து 26 ம், 4-ம் பரிசாக மட்டங்கிபட்டி காவியாவுக்கு ரூ.6 ஆயிரத்து 26ம் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக கல்லனை விஸ்வா ரவிச்சந்திரனுக்கு ரூ.14 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக மேலமடை சீமான் பாண்டியராஜனுக்கு ரூ.13 ஆயிரத்து 26-ம் , 3-ம் பரிசாக சிங்கம்புணரி செந்தில்குமாருக்கு ரூ.12 ஆயிரத்து 26ம், 4-ம் பரிசாக பாதரக்குடி வளர்மதிக்கு ரூ.5 ஆயிரத்து 26 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    போட்டியில் சீறிப்பாய்ந்த மாடுகள் இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. இதில் வெற்றிபெற்ற முதல் 4 மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், பரிசுத்தொ கைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறியமாடுகள் 12 எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று கண்டுகளித்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் அம்பலகாரர் பார்த்தி பன், தனம் பிரிக்ஸ் சேவுகப்பெருமாள், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணைச்சே ர்மன் இந்தியன் செந்தில் மற்றும் எட்டுக்கரை இளைஞர்கள் பங்காளிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×