search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
    X

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

    • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    சாயல்குடி

    கடலாடி நகர் தேவர் உற வின்முறைக்கு பாத்தியப் பட்ட பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 116-ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு வருகிற 28-ந் ேததி ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழுவினர் சார்பில் மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராம நாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி நகர் தேவர் உறவின்முறை தலைவர் சக்திவேல் முன்னிலை வகிக்கிறார். மாட்டு வண்டி பந்தயத்தை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவரும் கடலாடி ஒன்றிய அ.தி.மு.க. குழு தலைவரு மான முனியசாமி பாண்டியன் போட்டியை நடத்தி வைக்கிறார்.

    பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்த யத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனிய சாமி தொடங்கி வைக்கிறார். சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×