search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, டெல்லி சட்டசபை கூட்டம் முதல் முறையாக இன்று நடைபெற இருக்கிறது. மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்படுகிறார்.

    கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. இந்த மனுவை நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா விசாரிக்கிறார்.

    கைது செய்யப்பட்ட நிலையிலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் நிலவுவது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடத்த சுகாதார துறை அமைச்சருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சுகாதார துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் டெல்லி சட்டசபை இன்று கூடுவதாக அறிவித்துள்ளார்.

    இன்றைய கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் மருத்துவமனைகளில் கையிருப்பு எவ்வளவு மருந்துகள் உள்ளன என்ற விவரங்களையும் அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.

    தான் கைது செய்யப்பட்ட நிலையிலும், டெல்லி மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பர்தவாஜ் தெரிவித்தார். மேலும், டெல்லியில் மருத்து கையிருப்பு, மருத்துவமனைகளில் நடத்தப்படும் இலவச பரிசோதனைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், குறைகள் இருப்பின் அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்களை தயார்படுத்த தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    புதுடெல்லி:

    மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு காற்று மாசுபாடு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்னதாக இறக்கும் 7 மில்லியன் நபர்களின் மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 134 நாடுகளில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

    உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லி நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் பிஎம்2.5 துகள்களின் செறிவு 2022-ல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. அது, 2023-ல் 92.7 மைக்ரோகிராமாக மோசம் அடைந்துள்ளது.

    இதேபோல், காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலம் பெகுசராய் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் பி.எம்.2.5 துகள்களின் செறிவு ஒரு கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராமாக உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்த நகரம் இடம்பெறாத நிலையில் 2023-ல் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

    மாசுபட்ட நாடுகளின் தரவரிசையைப் பொருத்தவரை இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரியாக பிஎம்2.5 துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. 2022-ம் ஆண்டு 53.3 மைக்ரோகிராம் என்ற அளவுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளது.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
    • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

    சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    • இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான்
    • டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    "மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காங்கிரஸ் தலைவரான அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தார். அதன் பின்னர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். பஞ்சாபில் காங்கிரஸின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா, "முதலமைச்சர் பகவந்த் மானுக்கு 'நன்றி' தெரிவித்து, இதைத்தான் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரயில்வே போலீசார் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் இன்று, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    விவசாயிகளின் 4-வது நாள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல அடுக்குகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    டெல்லியின் காஜிபூர் எல்லையிலும் தீவிர கண்காணிப்பு உள்ளது. தடுப்புவேலிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையே உள்ள 2 பெரிய எல்லைகளான திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மூடப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி போலீசார் பல அடுக்கு முள்கம்பிகள், கான்கிரீட் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி குறித்து ஆம் ஆத்மி எம்.பி சந்தீப் பதக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியுடன் சீட் பங்கீடு தொடர்பாக 2 அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்தினோம். ஆனால் இந்த சந்திப்புகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

    இந்த 2 அதிகாரப்பூர்வ சந்திப்புகள் தவிர கடந்த 1 மாதத்தில் வேறு எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட அடுத்த கூட்டம் பற்றி தெரியாது.

    இன்று கனத்த மனதுடன் இங்கு அமர்ந்திருக்கிறேன். அசாமில் இருந்து 3 வேட்பாளர்களை அறிவித்தோம். அவர்களை இந்தியா கூட்டணி ஏற்கும் என நம்புகிறேன்.

    காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஒரு இடம் கூட தகுதி இல்லை. ஆனால் கூட்டணி தர்மத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு டெல்லியில் ஒரு இடத்தை வழங்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம். காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    கோவா மற்றும் குஜராத்தில் தலா ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளோம் என தெரிவித்தார்.

    • ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ளது.
    • ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    'இந்தியா' கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ளது. அதே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்த்ர்சிங் லவ்லி கூறியதாவது:-

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருகிறது. அதே சமயத்தில், ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லிக்கு செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
    • டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) 'டெல்லி சலோ' பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அழைத்து பேசியது. மத்திய உணவு மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை.

    இதையடுத்து மீண்டும் 12-ந்தேதி (இன்று) பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 3 மத்திய மந்திரிகள் விவசாயிகளுடன் பேச தயார் நிலையில் உள்ளனர்.

    ஆனால் பேச்சு வார்த்தைக்கு வர விவசாய சங்க பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டிக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில போலீசார் செய்து வருகிறார்கள். டெல்லிக்கு செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

    அம்பாலா ஜிந்த், ப்தே ஹாபாத் ஆகிய மாவட்ட எல்லைகளை மூடி உள்ளனர். அரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய தள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் குறுஞ்செய்திகளுக்கான செல்போன் சேவை தடை கொண்டு வரப்பட்டு உள்ளது. செல்போன் சேவைகள் 13-ந் தேதி வரை முடக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    டெல்லிக்குள் சென்று போராட திட்டமிட்டு இருக்கும் அரியானா விவசாயிகள் இன்றே தங்களது பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரியானாவில் பல இடங்களில் இன்று காலை விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடைபயணமாகவும் டெல்லியை நோக்கி புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல பஞ்சாபில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இரு மாநில விவசாயிகளும் பல்வேறு முனைகளில் டெல்லிக்குள் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து டெல்லி போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    அரியானா விவசாயிகள் டெல்லிக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. டெல்லிக்கு புறப்படும் விவசாயிகளை உடனுக்குடன் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டால் அவர்களை அடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 2 பெரிய ஸ்டேடியங்கள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. விவசாயிகளை அந்த ஸ்டேடியங்களில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்டேடியங்களில் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் பேரணி நடத்துவதை தடுக்கும் மத்திய அரசையும், அரியானா மாநில அரசையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டித்துள்ளார். விவசாயிகள் வரும் பாதைகளில் தடுப்புகள் ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயல் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் மறைமுகமாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    • இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
    • தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது.

    குடியரசு தின விழா முடிந்த மூன்றாவது நாள் அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் இன்று நடைபெற்றது.

    முப்படைகளை சேர்ந்த வீரர்கள் இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில போலீசார், மத்திய போலீசார், ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர்.

    தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது. இதனை காண, ஏராளமான மக்கள் விஜய் சவுக் பகுதிக்கு வருகை தந்தனர். வசுதேவ குடும்பகம் வடிப்பில் இந்த அணி வகுப்பானது நடைபெற்றது.

    ×