என் மலர்
நீங்கள் தேடியது "ipl 2024"
- ஆர்சிபி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார்.
ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் எப்போது பல சுவாரஸ்யமான மற்றும் மிரட்டலான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் சிறப்பான சம்பவங்கள் இந்த செய்தியின் மூலம் காணலாம்.
ஐ.பி.எலில் ரசிகர்கள் அதிகம் கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய கேப்டன்களின் மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக பார்க்கபடும் அணி மும்பை இந்தியன்ஸ். அந்த 2024-ம் ஆண்டில் கேப்டனான ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை நியமித்தனர். இது பெரிய அளவில் வெடித்தது. இதனால் சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார். இதனையடுத்து டி20 உலககோப்பை இறுதிபோட்டியில் சிறப்பாக விளையாடியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு கேலி செய்தவர்களை தனக்கு புகழ் பாட வைத்தார்.
2024-க்கு முன்பு ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணி அடித்திருந்த அதிகபட்ச ரன்களான 263 ரன்களை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஆர்.சி.பி. அணியின் சாதனையை முறியடித்தது.
ஐபிஎல் 2024-ன் 57-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. எல்எஸ்ஜி பிளேஆஃப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் சன்ரைசர்ஸ்-க்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் போட்டியின் முடிவு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது, ஏனெனில் ஐதராபாத் 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே. எல் ராகுல் மீது கோபமடைந்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமும் பேசிய வீடியோ வைரலானது. இதனால், கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் வரம்பிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
ஒரே பெயர் குழப்பத்தால் தவறுதலாக ரூ.20 லட்சத்துக்கு ஷஷாங் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்ததாக பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு பதில் தரும் விதமாக குஜராத் அணிக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அவுட் ஆன நேரத்தில் பஞ்சாப் அணிக்காக நிதானத்துடன் ஆடிய ஷஷாங் சிங், 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக்கான், உள்ளிட்ட 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா ஐசிசிக்கு தலைவர் ஆனது சமூகவலைத்தளங்களில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை அதிசயமாக அடைந்தது. ஆர்சிபி தனது முதல் எட்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று முதல் அணியாக மாறியது. அதனை தொடர்ந்து ஆறு வெற்றிகளைப் பெற்றது. இது ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் இரண்டாவது நீண்ட தொடர் வெற்றியாகும்.
- அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி.
- விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்சமாக மும்பை, சென்னை அணிகள் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக கொல்கத்தா அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதை தவிர ராஜஸ்தான், டெக்கான் ஜார்சஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஆகிய அணிகள் ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கோப்பையை வெல்லாதா அணியாக ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் உள்ளது. முக்கியமாக விராட் கோலி இடம்பெற்ற ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி அணி எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி என அந்த அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி. நான் பெங்களூரு அணியில் இருந்த போது விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை இருந்தது. எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை
இவ்வாறு பார்தீவ் படேல் கூறினார்.
- மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ராணா Flying kiss கொடுத்து கொண்டாடுவார்.
- இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.
இவ்வாறு ராணா கூறினார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
- பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது. இதன் மூலம் அந்த அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஷ்ரேயஸ் அய்யர், ஷாருக் கான் படத்தின் "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மற்ற கொல்கத்தா வீரர்களும் நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
- ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் முன்னேறின.
- இதில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் ரன்ரேட் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
முதல் பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற கொல்கத்தாவும், இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதற்கிடையே, ஐ.பி.எல். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐ.பி.எல். கோப்பையை 3-வது முறையாக வென்று சாதனை படைத்தது.
ஐ.பி.எல். என்பது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி ஸ்போர்ட்மேன்ஷிப்பையும், பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கும் மேடையாக திகழ்கிறது.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கிய படிப்பினைகளை தெரிந்து கொள்வோம்.
அமைதியாக இருக்கும் சூழ்நிலையே உங்களிடம் சிறந்ததைக் கொண்டுவரும்
ஐ.பி.எல். தொடரின் ஆரம்பம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. சில ஆட்டங்களில் தோல்வி அடைந்தாலும் சோர்ந்து போகாத அந்த அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது. இதனால் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஐதராபாத்தை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி வென்றதுடன், கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கிரிக்கெட் ஒரு மிக கொடூரமான விளையாட்டு

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த பாட் கம்மின்சை 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஹைதராபாத் அணி. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அணி உரிமையாளரான காவ்யா மாறன் அணி வீரர்களுக்கு உற்சாகம் தந்து பாராட்டியது பேசு பொருளானது.
வெற்றி பெறுவதற்காக 1 % முயற்சி எடுத்தால் அது 100%-க்கு கொண்டு செல்லும்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக பெங்களூருவை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடிந்தது. இதற்கு அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சிறப்பான ஆட்டமே காரணம் என்றால் மிகையாகாது.
அதீத நம்பிக்கை மிகவும் ஆபத்தானது

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்கான அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். முதலில் நடந்த போட்டிகளில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், சில போட்டிகளில் தோல்வி கண்டது. அதீத நம்பிக்கை காரணமாக முக்கியமான ஆட்டத்தில் தோல்வி அடைய நேரிட்டது.
வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே

ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி 5 முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் எம்.எஸ்.டோனி. நடப்பு தொடரே இவருக்கு கடைசி தொடராக இருக்கும் என கூறப்பட்டதால் இவர் களமிறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு அளவில்லை. இவரைப் பொறுத்தவரை வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என கருதுவது வழக்கம். எப்பொழுது இறங்கினாலும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். அதனையும் டோனி நிரூபிக்கத் தவறவில்லை.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டாம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா மும்பை அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதை ஏற்றுக் கொள்ளாத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதை கவனத்தில் கொள்ளாது வரும் காலங்களில் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே ஹர்திக் பாண்ட்யா யோசித்தால் அவருக்கு நல்லது.
யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்

இதுவரை நடந்த 17 ஐ.பி.எல். சீசன்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ரோகித் சர்மா. அணியின் கேப்டனாக இல்லாதபோதும், இவர் பொறுப்புடனும், நிதானமாகவும் ஆடியிருக்க வேண்டும். தனது அணியின் மீதான அதீத நம்பிக்கையால் அதிரடி தொடக்கத்தை கொடுக்க எண்ணி, விரைவில் பெவிலியன் திரும்புவது இவரது பலவீனம்.
விளையாட்டில் விசித்திரக் கதை முடிவு இல்லை
சென்னை அணியின் எம்.எஸ்.டோனி மற்றும் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் ஆகியோரது ஆட்டம் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்தது. இருவரது ஆட்டமும் ரசிகர்களை எப்பொழுதும் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடும்.
மோசமான நேரத்தில் சொந்த மக்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 14 போட்டியில் 7ல் வென்று ரன்ரேட் அடிப்படையில் தொடரிலிருந்து வெளியேறியது. ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ மோசமாக தோற்றதால், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நாம் மோசமாக விளையாடினால் ரசிகர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள். வெற்றி பெறுவதற்காக ஓரளவு போராட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐ.பி.எல். - மேலும் சில பாடங்கள் :
ஐ.பி.எல். போட்டிகளில் தனிப்பட்ட நபரின் சாதனைக்கு மதிப்பில்லை. குழுவாக இயங்குவதால் மட்டுமே பலன் கிடைக்கும்.
தோல்வி மற்றும் சரிவிலிருந்து ஒரு வீரர் எப்படி மீண்டெழுந்து வெற்றி பெறுகிறார் என்பதை கவனிக்கவேண்டும்.
போட்டியில் வெல்ல வேண்டுமெனில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்.
எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் ஒரு வீரர் கவனத்தை சிதறவிடாமல் வெற்றிமீது மட்டுமே கவனம் வைக்க வேண்டும்.
போட்டியில் இருக்கும் அழுத்தங்களை சிறப்பாக கையாளும் வீரரே வெற்றி பெறுவார்.
போட்டியில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தோல்வியை நினைத்து துவண்டு போகாமல் அடுத்தகட்ட முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஐ.பி.எல். கற்றுத் தருகிறது.
- ஐ.பி.எல். 2024 தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
- மைதான பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்திய மைதானத்தின் பணியாளர்கள், பொறுப்பாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
"சமீபத்திய டி20 சீசனின் உண்மையான கதாநாயகர்கள் அயராது உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் கடினமான வானிலையின் போதும், தலைசிறந்த பிட்ச்களை உருவாக்குவதில் சிறப்பாக ஈடுபட்டனர்."
"அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்து ஐ.பி.எல். மைதானங்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூ. 25 லட்சமும், கூடுதலாக மூன்று மைதானங்களின் ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும்," என்று ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல். 2024 பத்து மைதானங்கள் பட்டியலில் - மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஐதராபாத், பெங்களூரு, லக்னோ, ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
- ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பை வென்றது.
- ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த காவ்யா மாறன் அவர்களை பாராட்டி பேசினார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.
அப்போட்டியை நேரில் கண்டு ரசித்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்.
அதன் பிறகு ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.
அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மை பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
- கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
மூன்றாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐ.பி.எல். கோப்பையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், "எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன்," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதும் கொண்டாடியதை போன்றே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வரிசையில், தற்போது எங்கு சென்றாலும் கோப்பையுடன் செல்வேன் என்ற பாணியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
- ஹர்ஷித் ராணா 11 இன்னிங்சில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைன் இணைந்தார். இது கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.
மிகப்பெரிய அனுபவ வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் இருந்த போதிலும், இவரது பந்து வீச்சு எடுபடாமல் போனது. இதனால் 24 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது வேஸ்ட் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால் ஸ்டார்க் பலவீனம் ஹர்ஷித் ராணா, வைபஸ் ஆரோரோ ஆகியோரால் மறைக்கப்பட்டது. இரு இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினர். ஸ்விங், ஸ்லோவர் ஒன், ஸ்லோ பவுன்சர் என அசத்தினர். பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதி போட்டியில் ஸ்டார்க் அசத்திய வேறுகதை.
இறுதிப் போட்டியில் வைபவ் ஆரோரா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது சிறந்த அவுட் ஸ்விங் பந்தாகும் (இடது கை பேட்ஸ்மேனுக்கு). மேலும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்தார்கள்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, அந்த அணியின் பந்து வீச்சாளர் பரத் அருண் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.
இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இவரது காலத்தில்தான் இந்தியா வேகபந்து வீச்சில் முக்கியத்துவம் பிடித்தது. வெளிநாட்டு ஆடுகளங்களில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கி சாதனைகள் படைத்தது. பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஜொலித்தனர். ஜொலித்து வருகின்றனர்.
அதேபோல் கொல்கத்தா அணியிலும் இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து வெளிப்படுத்த முக்கிய காரணமக இருந்துள்ளார். இதனால் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மறைமக கதாநாயகன் என்று இவரை அழைக்கலாம்.
ஹர்ஷித் ராணா 13 போட்டிகளில் 11 போட்டிகளில் பந்து வீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
சுனில் நரைன் 17 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். பஞ்பாப் வீரர் ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.
- சுனில் நரைன் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 488 ரன்கள் விளாசினார்.
- 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2024 சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். பேட்டிங்கில் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்த தொடரில் பேட்டிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
15 போட்டிகளில் 14 இன்னிங்சில் பேட்டிங் செய்து மொத்தம் 488 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இறுதி போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் வெளியில் இருந்து வந்த இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சுனில் நரைன் சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுனில் நரைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக கொல்கத்தா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி.
அதேபோல் நேற்றிரவு ஆதரவை வெளிப்படுத்திய சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
- 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
- போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்றுள்ளார்.
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றது.
113 ரன்களுக்கு ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் போப்பையை தன் வசமாக்கியது.
இந்த வெற்றி கொல்கத்தா அணியின் பத்து ஆண்டு கால எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி கனடிய பாடகர்- ராப்பர் டிரேக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமி விருது பெற்ற ராப்பர் டிரேக், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக 250,000 அமெரிக்க டாலர்கள் பந்தயம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடி ) வென்று இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.73 கோடி பரிசை வென்றுள்ளார்.
கிரிக்கெட் பந்தயத்தில் டிரேக்கின் முதல் முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் ரக்பியில் பந்தயம் கட்டியிருக்கிறார்.
முன்னதாக, 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். டிரேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எனது முதல் கிரிக்கெட் பந்தயத்தை கொல்கத்தா மீது வைக்கிறேன்" என்று படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்று கோடியில் வென்றுள்ளார்.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி பந்தயம் கட்டி, டிரேக் இப்போது சுமார் ரூ.3.73 கோடியை பெற்றுள்ளார். இதன் மூலம், டிரேக் சுமார் 1.7 கோடி லாபத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
- இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் 2019-ம் ஆண்டு சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா இடது புறமும் டோனி வலது புறமும் இருந்தார். இறுதியில் ரோகித் கோப்பையை தட்டி சென்றார்.
அதேபோல 2020-ம் ஆண்டு மும்பை - டெல்லி மோதின. இதிலும் ரோகித் இடது புறம் நின்றார் கோப்பையை வென்றார். 2021-ல் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் இடது புறம் டோனி நின்றார் கோப்பையை வென்றார்.
இப்படி 2024 வரை இடது புறம் நின்ற அணியே கோப்பை வென்ற அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் 2019 முதல் குவாலிபையர் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.