search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நாயகன் மீண்டும் வரான்- 9 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்
    X

    நாயகன் மீண்டும் வரான்- 9 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்

    • இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
    • இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் மினி ஏலப்பட்டியலில் ஸ்டார்க் பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

    Next Story
    ×