search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hasan Ali"

    • 2008-ம் ஆண்டு அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
    • பின்னர் பல்வேறு காரணங்களால் அவர்கள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

    உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்.

    கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுப்பதாலும், மைதானம் நிறைந்து காணப்படும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

    2008-ம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். தன்வீர் சோஹைல், உமர் குல், கம்ரான் அக்மல் போன்ற வீரர்கள் விளையாடினார்கள்.

    அதன்பின் எல்லையில் தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் கிடையாது என்று இந்திய அரசு முடிவு செய்தது. அரசியல் பதற்றம்காரணமாக அது தொடர்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ள.

     அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடங்கியது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பதை தெரிவித்து வருவது வழக்கம்தான்.

    அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் "ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புகிறார்கள். நானும் அங்கே சென்று விளையாட விரும்புகிறேன். உலகத்தில் உள்ள மிகப்பெரிய லீக்கில் ஐபிஎல் லீக்கும் ஒன்று. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், "ஐபிஎல் போட்டியில் விளையாட முடியவில்லை என்பதை குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கவலையடையக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தானின் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    சட்டோகிராம்:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3  டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் பாகிஸ்தான் 3-0 என வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 113 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 114 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 91 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, பஹீம் அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபித் அலி, அப்துல்லா ஷபிக் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தைக் கடைப்பிடித்து அரை சதமடித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 93 ரன்னும், ஷபிக் 52 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி வீடு தாக்கப்பட்டதாக கூறி தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.


    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தோல்விக்கு அந்நாட்டு வீரர் ஹசன் அலி தவற விட்ட கேட்ச் தான் காரணம் என கடும் விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில், உடைந்த கண்ணாடி கொண்ட வீடு ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலியின் வீடு என்றும், அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தாக்குதலை தொடர்ந்து வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

     வைரல் புகைப்படம்

    இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஹசன் அலி குடும்பத்தார் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஹசன் அலி வீட்டின் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் புகைப்படத்தில் உள்ள வீடு கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது.
    மேத்யூ வாடேயின் கேட்சை ஹசன் அலி பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும் என தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    துபாயில் நடந்த 2-வது அரைஇறுதியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 177 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 52 பந்தில் 67 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), பகர்ஜமான் 32 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 34 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    டேவிட் வார்னர் 30 பந்தில் 49 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ வாடே 17 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்டோனிஸ் 31 பந்தில் 40 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சதாப் கான் 26 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

    ‌ஷகின்ஷா அப்ரிடி வீசிய 19-வது ஓவரின் 3-வது பந்தில் மேத்யூ வாடேயின் கேட்சை ஹசன் அலி தவற விட்டார். இது பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து மேத்யூ வாடே தொடர்ந்து 3 சிக்சர்கள் விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, ஹசன் அலி கேட்சை தவறவிட்டது. ஆட்டத்தின் திருப்புமுனை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மேத்யூ வாடேயின் கேட்சை தவறவிட்டது ஆட்டத்தின் திருப்புமுனை. அந்த கேட்சை ஹசன் அலி பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி ஏற்படும். ஆனால் விளையாட்டில் இப்படி நடக்கத்தான் செய்யும்.

    ஹசன் அலி எங்கள் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர். பாகிஸ்தானுக்காக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன்.

    எல்லோரும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒருவர் அபாரமான திறமையை வெளிப்படுத்துவார். இந்த நாள் அவருடைய நாளாக அமையவில்லை. நாங்கள் அவரது மனநிலையை மாற்றுவோம்.

    நாங்கள் திட்டமிட்டபடி விளையாடி ரன்களை குவித்தோம். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுள்ளோம். அடுத்த போட்டிகளில் அதை நிவர்த்தி செய்வோம். சிறிய தவறுகளால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டோம்.

    இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    நியூசிலாந்து அணி அரை இறுதியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது. #AsiaCup2018 #RashidKhan
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், சுழற்பந்து வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஹசன் அலி ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது.


    ஹசன் அலி

    பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்து செல்லும்போது ரஷித் கான் அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காண்பித்தார். ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை வேண்டும் என்றே தோளோடு தோள் உரசி சென்றார். பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ஹஸ்மத் துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை செய்தார்.


    அஸ்கர்

    இவை ஐசிசி நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆட்ட ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
    ஆசிய கோப்பை தொடரில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். #AsiaCup2018 #ViratKohli #HasanAli
    கராச்சி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 19-ந்தேதி சந்திக்கிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணி, ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது.

    இந்த நிலையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கேப்டன் விராட் கோலி, உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர், ஜாம்பவான். தனி வீரராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடியவர். எப்படிப்பட்ட சூழலிலும் நெருக்கடியை திறம்பட கையாளக்கூடியவர். அவருக்கு பதிலாக இடம் பெறும் வீரரால் அவர் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியாது. அதனால் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று ஒவ்வொரு இளம் பவுலர்களும் விரும்புவார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த முறை வரவில்லை. அதே நேரத்தில் கோலி இல்லாவிட்டாலும் இந்தியா சிறந்த அணி தான். மேலும் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்தியாவை நாங்கள் கடைசியாக சந்தித்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். இந்த தோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி இருக்கும். அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். அது எங்களுக்கு உள்ளூர் போன்றது. அங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவோம். இவை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுகூலமான விஷயமாகும்.

    இவ்வாறு ஹசன் அலி கூறினார். #AsiaCup #AsiaCup2018 #ViratKohli #HasanAli
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக 10 முறை சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்த நம்பிக்கையில் பாகிஸ்தான் களம் இறங்குகிறது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஹசன் அலி திகழ்கிறார்.

    இவர் இந்தியாவிற்கு எதிராக 10 முறை விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் நெருக்கடியில் இருக்கும்போது அவர்களை விட நாங்கள்தான் டாப். சாம்பியன்ஸ் டிராபியில் அப்படித்தான் அவர்களை தோற்கடித்தோம்.



    இந்தியாவிற்கு எதிராக விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தும் என்னுடைய ஸ்டைலை 10 முறை செய்ய விரும்புகிறேன். ஆனால், என்ன நடக்க இருக்கிறதை என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்’’ என்றார்.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.



    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ×