என் மலர்
நீங்கள் தேடியது "BANvPAK"
- டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
- முதலில் பேட்செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா பர்ஹான் அதிரடியாக விளையாடி அரை சதத்தைப் பதிவுசெய்தார். அவர் 63 ரன்னில் அவுட்டானார். ஹசன் நவாஸ் 33 ரன்னில் வெளியேறினார்.
வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்கதேச அணி 104 ரன்னில் சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 74 ரன்னில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.
வங்கதேசம் அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது சாஹிப்சாதா பர்ஹானுக்கும், தொடர் நாயகன் விருது ஜேகர் அலிக்கும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேச அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
- பாகிஸ்தான் தரப்பில் சாஹிப்சாதா பர்ஹான் 63 ரன்கள் விளாசினார்.
- வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் - சாஹிப்சாதா பர்ஹான் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து 63 ரன்களை எடுத்திருந்த பர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 5, ஹசன் நவாஸ் 33, ஹுசைன் தாலத் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 110 ரன்னில் ஆல் அவுட்டானது.
டாக்கா:
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் பகத் சமான் 44 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 22 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், வங்காளதேசம் 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.
கார்டிஃபில் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. மழையால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
பிரிஸ்டோலில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தென்ஆப்பிரிக்கா 9.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும், ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது.
12.4 ஓவரில் தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வங்காள தேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இடையிலான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆரம்ப கால கட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும். தற்போது பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.

1986-ம் ஆண்டு முதல் 2014 வரை பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையில் 32 போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 31 வெற்றிகளை ருசித்தது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்திதது.
ஆனால் 2015-க்குப் பிறகு பாகிஸ்தான் நிலைமைய தலைகீழாக மாறியுள்ளது. 2015 முதல் நேற்று வரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. இந்த நான்கிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
முதலில் பேட்டிங் வங்காள தேசம் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
Congratulations Bangladesh🇧🇩Disappointed by Pakistani team’s overall performance. Lacked attacking play of cricket in all fields. Its a young side who performed well in the last tournaments&set r expectations high.More focus n practice is needed4a stronger comeback #HopeNotOut
— Shahid Afridi (@SAfridiOfficial) September 26, 2018
வங்காள தேசம் அணியிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி ‘டுவிட்டர்’ மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காள தேச அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. மைதானத்தில் ஆக்ரோசமான ஆட்டம் அனைத்து துறைகளிலும் மிஸ். கடந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணி மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. திரும்பவும் நல்ல நிலைக்கு திரும்பி பயிற்சி ஆட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.
லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.

அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. சர்கார், ருபெல், மொமினுல் ஹக்யூ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.






