search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushfiqur Rahim"

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்த முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனையை ரஹீம் படைத்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார். அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.

    இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார். இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.

    • அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் அடித்தார்.
    • 50 ஓவர் முடிவில் வங்காள தேச அணி 349 ரன்களை குவித்தது.

    அயர்லாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காள தேசம் 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. டெத் ஓவர்களில் காட்டடி அடித்து 60 பந்தில் சதமடித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார்.

    இந்த போட்டி மழை காரணமாக முடிவு இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன் என முஷ்பிகுர் ரஹீம் கூறினார்.
    • ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.

    வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வயதில் வங்காளதேச அணிக்காக 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன இவர் டி-20 போட்டிகளில் 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

    2007-ம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர் ரஹீம் ஆடியுள்ளார்.

    இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கு அந்நாட்டு அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    தனது ஒய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன்.

    மேலும், ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் எம்.ஆர்.15 என்ற பெயருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எனது நாட்டுக்காக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து முஷ்பிகுர் ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்களும், டி-20 போட்டிகளில் 1,500 ரன்களும் அடித்துள்ளார்.

    நாங்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் கலந்து கொள்வதற்காக மட்டுமே செல்லமாட்டோம், கோப்பையை வெல்லவே செல்கிறோம் என முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதில் வங்காளதேச அணியும் ஒன்றும். கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காலிறுதி வரை முன்னேறியது.



    அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், ‘‘நாங்கள் இங்கிலாந்து செல்வது, சும்மா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு மட்டுமல்ல. கோப்பையை வெல்வதற்காகவும்தான். இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.
    ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் வங்காள தேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 2--வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 நாட்அவுட்), மொமினுல் ஹக்யூ (161) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஆட்டமிழக்காமல் 219 ரன்கள் குவித்ததன் மூலம் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அந்த சாதனைகள் பின்வருமாறு:-

    1. 219 ரன்கள் அடித்ததன் மூலம் வங்காள தேச பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் அடித்ததுதான் இதற்கு முன் சாதனையாக இருந்தது.



    2. 200 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு முறை சொந்த நாட்டின் சாதனையை முறியடித்த டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லி, வினு மங்கட், பிரையர் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார்.

    3. விக்கெட் கீப்பராக இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரின் அதிபட்ச நான்காவது ஸ்கோர் இதுவாகும்.

    4. 421 பந்துகள் சந்தித்ததன் மூலம் அதிக பந்துகள் சந்தித்த வங்காள தேச பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அஷ்ரபுல் 417 பந்துகள் சந்தித்ததே சாதனையாக இருந்தது.



    5. 589 நிமிடங்கள் பேட்டிங் செய்து டெஸ்ட் இன்னிங்சில் அதிக நிமிடங்கள் பேட்டிங் செய்த வங்காள தேச பேட்டிஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமினுல் இஸ்லாம் 535 நிமிடங்கள் களத்தில் நின்று 145 ரன்கள் சேர்த்துள்ளார்.

    6. 2018-ம் ஆண்டில் அடிக்கப்பட்ட ஒரே இரட்டை சதம் இதுதான். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 192 ரன்கள் அடித்ததே 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.

    7. 160 ஓவர்கள் விளையாடியது 2-வது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன் 2013-ல் 196 ஓவர்கள் விளையாடியுள்ளனர்.
    முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

    லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் அடித்தபோது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து முஷ்பிகுர் ரஹிம் சாதனைப் படைத்துள்ளார். #MushfiqurRahim
    வங்காள தேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 33 ரன்கள் சேர்த்தார். 7 ரன்னைத் தொட்டபோது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 190 போடடிகளில் 5 ஆயிரம் ரன்னைத் தொட்டார்.

    இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.



    31 வயதாகும் முஷ்பிகுர் ரஹிம் 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2006-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் 6 சதம், 29 அரைசதங்களும், டெஸ்ட் போட்டியில் ஐந்து சதம், 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
    ×