search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvNZ"

    • நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • கிளென் பிலிப்ஸ், சாண்ட்னர் ஜோடி 70 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.

    டாக்கா:

    வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 87 ரன்கள் எடுத்தார்.

    8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் பொறுப்புடன் ஆடி 59 ரன்கள் எடுத்தார்.

    இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தத்தளித்தது.

    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    • நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளினர். இதனால் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணிக்கும் அதே நிலைதான். 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 72 பந்தில் 87 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 180 ரன்கள் எடுத்தது.

    8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வங்காளதேசம் மொத்தமாக 136 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதனால் போட்டி கடைசி ரன் வரை பரபரப்பாகவே செல்லும்.

    • முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 2-வது இன்னிங்சை வங்காளதேசம் அணி தொடங்கியது. 2 ரன்னில் மஹ்முதுல் ஹசன் ஜாய் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது நாள் ஆட்டம் முடிவில் வங்காளதேசம் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 38 ரன்கள் எடுத்தது.

    • நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
    • வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சாண்ட்னர் 1, ஜாமிசன் 20, சவுத்தி 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனை அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. நாளை 3-வது நாள் ஆட்டம் தொடங்கும்.

    • முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் திணற முதல் நாள் ஆட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனமால் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 2-வது நாள் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹொசைன் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 66.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. டேரில் மிட்செல் 12 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்த முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனையை ரஹீம் படைத்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார். அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.

    இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார். இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.

    • வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

    டாக்கா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய்- ஜாகிர் ஹசன் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 8 ரன்கள் எடுத்த ஜாகிர் ஹசன் 8 ரன்னில் அவுட் ஆனார். உடனே மஹ்முதுல் ஹசன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இறுதியில் வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ், சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி நேற்று அளித்த பேட்டியில், முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் விளையாடிய விதம் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எப்படி ஆட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.

    அடுத்த போட்டியில் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன். தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள். வெற்றியுடன் தாயகம் திரும்புவோம் என்று நம்புகிறேன் என்றார். 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆட்டநாயகானக தைஜுல் இஸ்லாம் தேர்வு செய்யப்பட்டார்.

    சில்ஹெட்:

    நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11, நிக்கோல்ஸ் 2, டாம் ப்ளண்டெல் 6, பிளிப்ஸ் 12, ஜெமிசன் 9 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் அரை சதம் விளாசினார். இவர் 58 ரன்கள் எடுத்திருந்த போது நயீம் ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சவுதி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 24 பந்துகள் சந்தித்து 34 ரன்கள் எடுத்தார். பொறுமையாக விளையாடி சோதி 91 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆனார்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரே ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தங்கள் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வரலாற்று சாதனை படைத்தது.

    • 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
    • வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    சில்ஹெட்:

    நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.


    இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11, நிக்கோல்ஸ் 2, டாம் ப்ளண்டெல் 6, பிளிப்ஸ் 12, ஜெமிசன் 9 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    ×