search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசம்- நியூசிலாந்து கடைசி டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு
    X

    வங்காளதேசம்- நியூசிலாந்து கடைசி டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

    • முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் திணற முதல் நாள் ஆட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனமால் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 2-வது நாள் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×