search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mirpur Test"

    • முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் திணற முதல் நாள் ஆட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனமால் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 2-வது நாள் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி நேற்று அளித்த பேட்டியில், முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் விளையாடிய விதம் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எப்படி ஆட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.

    அடுத்த போட்டியில் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன். தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள். வெற்றியுடன் தாயகம் திரும்புவோம் என்று நம்புகிறேன் என்றார். 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×