search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sodhi"

    • 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி நேற்று அளித்த பேட்டியில், முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் விளையாடிய விதம் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எப்படி ஆட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.

    அடுத்த போட்டியில் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன். தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள். வெற்றியுடன் தாயகம் திரும்புவோம் என்று நம்புகிறேன் என்றார். 2008-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 200 கிராம்,
    கேரட் - 150 கிராம்,
    பீன்ஸ் - 75 கிராம்,
    பச்சைமிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    வெங்காயம் - 100 கிராம்,
    தேங்காய் - 1,
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் - தேவையான அளவு,  
    பட்டை, கிராம்பு கசகசா,
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

    இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.

    பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.

    அடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.

    சூப்பரான சொதி ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×