search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sothi"

    இடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 200 கிராம்,
    கேரட் - 150 கிராம்,
    பீன்ஸ் - 75 கிராம்,
    பச்சைமிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    வெங்காயம் - 100 கிராம்,
    தேங்காய் - 1,
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் - தேவையான அளவு,  
    பட்டை, கிராம்பு கசகசா,
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

    இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.

    பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.

    அடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.

    சூப்பரான சொதி ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பம், இடியாப்பம், தோசை, இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் சொதி. இன்று அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 6
    2-ம் தேங்காய் பால் - 200 மில்லி,
    முதல் தேங்காய் பால் - 100 மில்லி
    மஞ்சள் தூள் - 5 கிராம்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் ப.மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, 2-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணிநேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

    2 மணிநேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து குளிர்ச்சி போனவுடன் கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    இப்போது முதல் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.

    லேசாக கொதி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் திரிந்து விடும்.

    சூப்பரான மட்டன் சொதி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×