search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் திடீர் விலகல்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் திடீர் விலகல்

    • 17-வது ஐ.பி.எல். தொடர் 2024, மார்ச் 23-ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இன்றுக்குள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

    மேலும் டிரேடிங் முறையில் வீரர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி), ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கல் (ரூ.7.75 கோடி) லக்னோ அணிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சபாஷ் அகமது ரூ.2.4 கோடிக்கு ஐதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார்.

    முன்னாள் கேப்டனான அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஜோ ரூட்டின் இந்த முடிவை மரியாதையுடன் வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் 2-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×