search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maruti Wagon R"

    • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
    • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

    சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வேகன் ஆர் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MarutiSuzuki



    மாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வரையில் எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாவதாக கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் ஏழு பேர் அமரக்கூடிய எம்.பி.வி. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் கார் நெக்சா விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேகன் ஆர் கார் பற்றி மாருதி சுசுகி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.



    மாருதியின் புதிய வேகன் ஆர் கார் விற்பனை முந்தைய மாடல்களை விட குறைந்திருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய மாடல்களை போன்று புதிய வேகன் ஆர் கார்கள் விற்பனையாகவில்லை.

    எனினும், ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய வேகன் ஆர் விற்பனை அதிகரிக்கும் என மாருதி சுசுகி நம்புகிறது. இந்தியாவில் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி. கார் புதிய நேம்பிளேட் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் அறிமுகமாகும் முன், வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. கார் சோலியோ என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.

    புதிய வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே என்ஜின் புதிய மாருதி வேகன் ஆர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் AGS டிரான்ஸ்மிஷன்  உடன் கிடைக்கிறது.
    ×