search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன்"

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.
    • 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.

    சம்பவத்தன்று காலை ஷட்டரை பாதியளவு மூடிவிட்டு அங்குள்ள பணியாளர்கள் பொருட்கள் பாக்கெட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சுமார் 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

    இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

    கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பணியாளர்கள் பார்த்தனர். அதில் சிறுவன் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
    • மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.

    ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

    இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.

    அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

    • உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7).

    இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

    அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.

    பின்னர் சில மணிநேரம் ஐ.சி.யு வார்டில் முழு கண்காணிப்பில் வைத்தனர். இப்போது, சிறுவன் நெகன் ஆர்யா முழுமையாக குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • புகைப்படம் ‘எக்ஸ்’ தளத்தில் வைரலாகி வருகிறது.
    • சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

    சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை ஒரு சிறுவன் பரிசளித்துள்ளான்.

    இதுகுறித்த புகைப்படம் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது. சந்திரயான்-3 பயணத்தின் போது சந்திரனுக்கு எடுத்து செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் மாதிரியை அந்த சிறுவன் மிக நுணுக்கமாக வடிவமைத்து சோம்நாத்திடம் வழங்கி உள்ளான். சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விண்வெளி ஆய்வில் ஏற்படுத்தி ஆழமான தாக்கத்துக்கு இது ஒரு சான்றாக இருப்பதாக பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • 8 வயது சிறுவன் 4-வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து லிப்டில் கீழே இறங்கி உள்ளார்.
    • இக்கட்டான நேரங்களில் பதட்டப்படவோ, பயப்படவோ கூடாது என எனது தந்தை கூறியிருக்கிறார்.

    பெரியவர்கள் சிலருக்கு லிப்ட் பயம் இருப்பதை இப்போதும் காண முடிகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 8 வயது சிறுவன் 4-வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து லிப்டில் கீழே இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் 2-வது மாடியில் சிக்கி கொண்டது. இதனால் சிறுவன் டியூசனுக்கு செல்லவில்லை. வழக்கமாக அந்த சிறுவனை தாயார் டியுசனுக்கு அழைத்து செல்வார். ஆனால் அன்றைய தினம் சிறுவன் டியூசனுக்கு வராதது குறித்து ஆசிரியர் கார்விட்டில் என்பவர் சிறுவனின் தந்தை பவான் சண்டிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை தேடிய போது தான் சிறுவன் லிப்டுக்குள் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி லிப்டில் சிக்கிய சிறுவனை காப்பாற்றி உள்ளனர். மீட்புக்குழுவினர் மிகவும் பதட்டம் அடைந்து லிப்டுக்குள் சென்ற போது சிறுவனோ எந்த பதட்டமும் இல்லாமல் வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் சிறுவனிடம் கேட்ட போது, லிப்ட் பழுதாகி நின்றதும் எமர்ஜென்சி பட்டனை அழுத்தினேன். பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டினேன். ஆனால் யாரும் வரவில்லை. எனவே அமைதியாக எனது வீட்டு பாடத்தை எழுத தொடங்கினேன். இக்கட்டான நேரங்களில் பதட்டப்படவோ, பயப்படவோ கூடாது என எனது தந்தை கூறியிருக்கிறார். அதையே தான் பின்பற்றினேன் என அந்த சிறுவன் கூறினான்.

    • யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது.
    • அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை போன்ற காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது. இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ஒலக்கூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் 2 பேரும் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதில் ஒருவர் வானூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 23), வானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் இவர்கள் 2 பேரும் யாரும் இல்லாத வீட்டை நோட்டமிட்டு பணம் நகையை கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலீசார் இவர்களிடம் இருந்த 7 பவுன் தங்க நகை, செல்போன், லேப்டாப் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்து முருகனை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை விழுப்புரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்த சிறார் இல்லத்தில் சேர்த்தனர்.

    • அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது மாணவிக்கு வடவேடம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் பழனிக்கு சென்றார்.

    பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் சிறுவன் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து 2 பேரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 17 வயது சிறுவன், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இதற்கிடையே சிறுமிக்கு, தன்னுடன் படிக்கும், சக மாணவரின் சகோதரரான அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அடிக்கடி சிறுவன், மாணவியை, அவரது தாய் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வந்தார். ஒரு நாள் சிறுவன், மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மாணவியை பலாத்காரம் செய்து விட்டார்.

    மேலும் இதனை வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறுவன் தெரிவித்து விட்டார். இதனால் மாணவி யாரிடமும் தெரிவிக்க வில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது தாயார், மாணவியை சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு, மாணவியின் தாய், அதிர்ச்சியானார்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு நடந்தவற்றை மாணவி தாயிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவன், மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.

    • தூண்டுதலின்பேரில் பாட்டி வீட்டில் ரூ.47 ஆயிரம் சிறுவன் திருடினான்.
    • பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    விருதுநகர் இந்திராநகர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிறுவன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பெண்கள் சிறுவனுக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து அன்பாக பேசி பழகி வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று 4 பேரும் சிறுவனிடம் பாட்டி வீட்டு பீரோவில் இருந்து பணத்தை திருடு வருமாறு கூறி உள்ளனர். அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து ரூ.47 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து வந்து அந்த பெண்க ளிடம் கொடுத்துள்ளான். பின்னர் அந்த பணத்தை அவர்கள் பங்கு போட்டு கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சிறுவனின் தாய் பீரோவில் இருந்த பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுவனிடம் கேட்டபோது நடந்த விபரத்தை கூறியுள்ளான். மேலும் பணத்தை எடுத்தது யாரிடமும் கூறக்கூடாது என பெண்கள் மிரட்டிய தாகவும் சிறுவன் அழுதுக் கொண்டே தனது தாயிடம் கூறினான்.

    இதையடுத்து சிறுவனின் தாயார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த அர்ஜூன் மனைவி அன்னி யம்மாள் என்ற அம்முனி (வயது33), செல்லப்பாண்டி மகள் ஜான்சி ராணி என்ற மீனா (21), மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பாலு மகன் சாலமன் ராஜா (24), ஆழ்வார்புரம் முருகன் மகன் கார்த்திக் (26) ஆகிய 4 பேர் சிறுவனை தூண்டி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
    • நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    புதுச்சேரி:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.

    அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.

    அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

    இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.

    இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.

    அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.

    ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.

    • சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரது மகன் ஆகாஷ்(வயது 17). சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவனது தாயார் ஆஷிகா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 5 ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி 7 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
    • உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காவலர் வாய்ஸ் தன்னார்வலர்கள் குழு, யூத் அச்சீவர்ஸ்கிளப் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை தாங்கினார். வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனோஜ்குமார்-ஸ்ரீஜா தம்பதியின் மகன் சம்ருத் (வயது7) ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியவாறு ஒரு மணி நேரத்தில் 5.5 கிமீ தூரத்தை ஓடி கடந்து உலக சாதனை படைத்தார்.

    மேலும் 5 வயது சிறுமி ஆராதனா கண்களை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியபடி இடுப்பில் உள்ள வளையத்தை 30 நிமிடங்கள் சுழற்றி சாதனை செய்தார். மேலும் யோகவீனா (14) கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் மற்றும் யோகா ஆகியவற்றை அற்புதமாக செய்து காண்பித்தார்.

    நிகழ்ச்சியில் யூத் அச்சீவர்ஸ்கிளப் இயக்குனர் அய்யப்பன், உலக சாதனை தீர்ப்பாளர் நோபல் உலக சாதனை சி.இ.ஓ. அரவிந்த், காவலர் வாய்ஸ் தன்னார்வர்கள் குழு ஒருங்கிணைப்பார் ஞானேஸ்வரன், செயலாளர் அழகர்சாமி, மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் மனோகர் சாமுவேல், பயிற்சியாளர்கள் அசோக், அந்தோனிசாமி, ஆனந்த்பாபு, விக்னேஷ், ஆனந்த, காவலர் வாய்ஸ் மாவட்ட செய்தியாளர் ராதாகிருஷ்ணராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×