என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சியில் பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்
- சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இதற்கிடையே சிறுமிக்கு, தன்னுடன் படிக்கும், சக மாணவரின் சகோதரரான அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அடிக்கடி சிறுவன், மாணவியை, அவரது தாய் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வந்தார். ஒரு நாள் சிறுவன், மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மாணவியை பலாத்காரம் செய்து விட்டார்.
மேலும் இதனை வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறுவன் தெரிவித்து விட்டார். இதனால் மாணவி யாரிடமும் தெரிவிக்க வில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது தாயார், மாணவியை சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு, மாணவியின் தாய், அதிர்ச்சியானார்.
இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு நடந்தவற்றை மாணவி தாயிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவன், மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்