search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவனின் வயிற்றில் 50 காந்த உருண்டைகள்- அறுவை சிகிச்சை செய்து அகற்றம்
    X

    சிறுவனின் வயிற்றில் 50 காந்த உருண்டைகள்- அறுவை சிகிச்சை செய்து அகற்றம்

    • உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7).

    இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

    அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.

    பின்னர் சில மணிநேரம் ஐ.சி.யு வார்டில் முழு கண்காணிப்பில் வைத்தனர். இப்போது, சிறுவன் நெகன் ஆர்யா முழுமையாக குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×