search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A boy"

    • சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இதற்கிடையே சிறுமிக்கு, தன்னுடன் படிக்கும், சக மாணவரின் சகோதரரான அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அடிக்கடி சிறுவன், மாணவியை, அவரது தாய் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வந்தார். ஒரு நாள் சிறுவன், மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மாணவியை பலாத்காரம் செய்து விட்டார்.

    மேலும் இதனை வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறுவன் தெரிவித்து விட்டார். இதனால் மாணவி யாரிடமும் தெரிவிக்க வில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது தாயார், மாணவியை சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு, மாணவியின் தாய், அதிர்ச்சியானார்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு நடந்தவற்றை மாணவி தாயிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவன், மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.

    • ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில் சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சீனியன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (44). இவரது மனைவி சகிலா பானு. இவர்களது மகன் சாகுல் அமீது (12). அமீர் அப்பாஸும், அவரது மனைவி சகிலா பானுவும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்ற னர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிட ப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகத் தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததால், தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.

    அப்போது தான் வழக்கமாக விளையாடும், சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில், சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவனை மீட்டு, மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாடி த்துடிப்பு குறைந்து வருவ தாக டாக்டர்கள் கூறி யுள்ளனர்.

    இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் சாகுல் அமீதை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றார். குளியல் அறைக்கு கதவு இல்லாததால் சேலையை மறைத்துக்கொண்டு குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற 25 வயது வாலிபர் ஒருவர் கதவு இல்லாத குளியல் அறையில் சிறுமி குளிப்பதை பார்த்தார். பின்னர் அவர் சேலையை விலக்கி சிறுமி குளிப்பதை பார்த்து ரசித்தார். அப்போது அங்கு சிறுமியின் தாய் தனது மகள் குளிப்பதை வாலிபர் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் உருட்டு கட்டையால் அந்த வாலிபரை தாக்கி தர்ம அடி கொடுத்தனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த மில் தொழிலாளி ரமேஷ் (வயது 25) என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    ×