என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strangulation"

    • ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில் சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சீனியன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (44). இவரது மனைவி சகிலா பானு. இவர்களது மகன் சாகுல் அமீது (12). அமீர் அப்பாஸும், அவரது மனைவி சகிலா பானுவும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்ற னர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிட ப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகத் தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததால், தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.

    அப்போது தான் வழக்கமாக விளையாடும், சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில், சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவனை மீட்டு, மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாடி த்துடிப்பு குறைந்து வருவ தாக டாக்டர்கள் கூறி யுள்ளனர்.

    இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் சாகுல் அமீதை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
    • துண்டால் கழுத்தை நெரித்து கொலை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (வயது41). பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரும் முத்துக்கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (43) என்பவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நண்பர் கேட்டுக்கொண்டதால் பரமசிவம் மோகன்ராஜுக்கு தள்ளு வண்டியில் பிரியாணி கடை வைத்துக் கொடுத்துள்ளார். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று பரமசிவன் வீட்டில் அனை வரும் வெளியூர் சென்றிருந்த தால் மாலை வரை இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

    இரவில் வீடு திரும்பிய பரமசிவத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் பரமசிவம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

    ×