search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fell down"

    • விளாங்குறிச்சி பகுதியில் தங்கி அந்த பகுதியில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களிடம் மதுவை வாங்கி குடித்தார்.

    சரவணம்பட்டி,

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்ட் ராம் (வயது 27). கட்டிடத் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் விளாங்குறிச்சி பகுதியில் தங்கி அந்த பகுதியில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 11 மணியளவில் பில்ட் ராம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். டாஸ்மாக் கடை மூடி இருந்ததால் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களிடம் மதுவை வாங்கி குடித்தார்.

    பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பலுக்கும், பில்ட்ராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பில்ட்ராமை கீழே தள்ளினர். இதில் நிலைகுலைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு கிடந்த கல்லில் அவரது தலை பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கீழே தள்ளி விட்டதில் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து, ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.
    • தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தாராபுரம், எம்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஆர்த்தி இவர்களுக்கு, யாழினிஎன்ற ஒரு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து,ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.

    தொடர்ந்து, தாராபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தைஉட்பட, 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தை அடைந்த போது, வேகத்தடை இருப்பதுதெரியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஏற்றினார். அப்போது, வண்டியில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் கையில் இருந்த குழந்தை கை தவறி ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தது.

    இதையடுத்து தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,பின், திருப்பூருக்கு கொண்டு செல்லும் போதுகுழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    தூத்துக்குடி அருகே கோவில் கொடையில் சாமியாடியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எல்லை நாயக்கன் பட்டியை சேர்ந்த முருகன் யோகீஸ்வரர் (65) என்பவர் சாமி ஆடி சென்றுள்ளார். 2 மணி நேரமாக வேட்டைக்கு சென்ற சாமி திரும்பி வராததால் பக்தர்கள், பொதுமக்கள் அவரை தேடி சென்றனர்.

    அப்போது தெய்வச்செயல்புரம் ஊருக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த மொட்டை கிணற்றில் சாமியாடி சென்ற முருகன் யோகீஸ்வரர் தவறி விழுந்து கிடந்ததை கண்டனர். 

    உடைந்த பாட்டில்கள் சேரும் சகதியுமாக இருந்த அந்தக் கிணற்றில் சாமியாடி முருகன் யோகீஸ்வரர் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக உள்ளே இறங்கி அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

     அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயிலில் இருந்து விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் சுபாஷ் (27). சொந்த ஊர் விழுப்புரம்.

    இவர் நேற்று முன்தினம் எழும்பூரில் இருந்து சேலம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாசல் அருகே நின்று பயணம் செய்தார்.

    ரெயில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், செங்கல்பட்டுக்கும் இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் கீழே தவறி விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இன்று மரணம் அடைந்தார். செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் நண்பர்களால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சப்பந்தி குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மவின்குமார் (வயது 24). பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார். நேற்று ஊருக்கு வந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அங்குள்ள தென்னந்தோப்பில் மது குடித்தனர்.

    போதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி விட்டு விளையாடினர். மவின்குமாருக்கு அதிகளவிலான போதை தலைக்கேறியது. இதனால் அவரை அங்குள்ள கிணற்றில் தூக்கி போடுவதற்காக தூக்கினர். இதனை அவரது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் மவின்குமாரை தூக்கி கிணற்றில் போட்டனர்.

    மேலும் அவர்களும் கிணற்றுக்குள் குதித்து குளித்தனர். மவின்குமார் தண்ணீரில் தத்தளித்தார். நீச்சல் தெரியாத அவர் கிணற்றுக்குள் மூழ்கினார். இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை மவின்குமாரின் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது கிணற்றின் அருகே அவரது செல்போன் கிடந்தது. அதில் நண்பர்கள் சேர்ந்து அவரை கிணற்றில் தூக்கி வீசிய வீடியோ காட்சிகளை கண்டு திடுக்கிட்டனர். கதறி அழுத அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.


    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மவின்குமாரை பிணமாக மீட்டனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மவின்குமாரின் நண்பர்கள் சுதர்சன், அருண், அஜித், பாவித் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    தாராபுரம் அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்புத்துறைப்பாளையத்தை சேர்ந்தவர் இருதயராஜ். மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் நவீன்ராஜ் (வயது 19). கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருடைய நண்பரான பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பிரகாசின் உடல் நலம் விசாரிக்க அவருடைய வீட்டிற்கு நேற்று நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான சபரீஸ்வரன் (19), பிரகாஷ் (19), கோகுல்நாத் (19) அருண்பாண்டியன் (19) வடுகபாளையத்தை சேர்ந்த மனோஜ் (20), புதுநவக்கொம்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (19), மோகன் (19) ஆகியோர் சென்றனர்.

    அங்கு அவரை பார்த்து விட்டு மதியம் 2 மணிக்கு அனைவரும் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அதன்படி நகராட்சி தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இறங்கி அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நவீன்ராஜ் தண்ணீரில் மூழ்கி னார். உடனே காப்பாற்றுங் கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார்.உடனே அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி நவீன்ராஜ் இறந்தார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை தேடியபோது, அவருடைய உடல் அந்த பகுதியில் மிதந்தது. இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று நவீன்ராஜ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×