search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and died"

    • ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.
    • 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (73). இவர், மோளகவுண்ட ம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 நாள்களாக உடல் நிலை சரி இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மில்லுக்குள் சாம்பல் கொட்டும் இடத்தில் முத்துசாமி நேற்று மதியம் 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, முத்துசாமியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலு கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சண்முகபிரபு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    கோபி கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து ராஜே ஸ்வரி ஏற்கனவே திருமண மான ஈரோட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி சண்முக பிரபு (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு கோபி கொளப்ப லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜே ஸ்வரி டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள தங்கை வீட்டுக்கு கோவில் திருவிழா விற்காக குடும்பத்துடன் வந்து தங்கினார்.

    இந்நிலையியில் டி.என்.பாளையத்தில் ராஜேஸ்வரி யின் தங்கை வீட்டில் நேற்று காலை அவர் மற்றும் அவரது கணவர் சண்முக பிரபு குடும்பத்துடன் வாசலில் அமர்ந்து டீ குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது சண்முக பிரபுவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு அந்த பகுதியில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சண்முக பிரபுவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முக பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் சண்முகபிரபுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
    • சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் ஆட்டோ ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது.

    தற்போது வெங்கடேஷ் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

    குடிப்பழ க்கத்துக்கு அடிமையான அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மேலப்பாளையம் பகுதியில் ஊருக்கு பொதுவான கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் உடையது. அதில் சுமார் 60 அடி தண்ணீரும் உள்ளது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இறந்தவர் சிவப்பு வெள்ளை நிறத்தில் கோடு போட்ட அரக்கை சட்டை, வெள்ளை ப்ளூ கலரில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார்.

    அவரது வலது பக்க கால் எலும்பின் மேல் காயத் தழும்பு, இடது கால் முட்டியில் காய தழும்பும், தலை வழுக்கையாகவும், மீசை தாடியுடன் கருப்பு நிற முடிகளுடன் இருந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்க ன்பாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (73).

    சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜோதிநாதன் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்த போது ஜோதிநாதன் இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    ×