என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fell into a well"

    • குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
    • சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் ஆட்டோ ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது.

    தற்போது வெங்கடேஷ் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

    குடிப்பழ க்கத்துக்கு அடிமையான அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மேலப்பாளையம் பகுதியில் ஊருக்கு பொதுவான கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் உடையது. அதில் சுமார் 60 அடி தண்ணீரும் உள்ளது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் கருவி மூலம் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பி.ஆர்.எஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 30 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது.

    இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்ற போது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த பாம்பை சென்னிமலை வன காவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர்.

    • கிணற்றுக்குள் காட்டுப்பன்றி தவறி விழுந்தது தெரிய வந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மான், காட்டு பன்றிகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியை யொட்டி விவசாய நிலங்களும் உள்ளது.

    இந்த பகுதியில் சுந்தர் என்பவரது விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து கிணற்றில் நேற்று இரவு ஒரு காட்டு பன்றி தவறி விழுந்தது.

    இதையடுத்து இன்று காலை சுந்தர் தோட்டத்தை சுற்றி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது.

    இதையடுத்து அவர் கிண்ற்றுக்கு அருகே சென்று பார்த்தார். அப்போது அதில் காட்டு பன்றி தவறி விழுந்தது தெரிய வந்தது.

    இத குறித்து அவர் அந்தியூர் ரேஞ்சர் உத்தரசாமிக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு உத்ரசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    மேலும் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்த காட்டு பன்றியை உயிருடன் மீட்டனர்.

    இதையடுத்து மீட்கப்பட்ட காட்டு பன்றியை வனப்பகுதியில் விடப்பட்டது.

    ×