கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றி

கிணற்றுக்குள் காட்டுப்பன்றி தவறி விழுந்தது தெரிய வந்தது.தீயணைப்பு வீரர்கள் காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றியை கயிறு கட்டி மீட்கப்பட்ட போது எடுத்த படம்.
கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றியை கயிறு கட்டி மீட்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மான், காட்டு பன்றிகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியை யொட்டி விவசாய நிலங்களும் உள்ளது.

இந்த பகுதியில் சுந்தர் என்பவரது விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து கிணற்றில் நேற்று இரவு ஒரு காட்டு பன்றி தவறி விழுந்தது.

இதையடுத்து இன்று காலை சுந்தர் தோட்டத்தை சுற்றி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது.

இதையடுத்து அவர் கிண்ற்றுக்கு அருகே சென்று பார்த்தார். அப்போது அதில் காட்டு பன்றி தவறி விழுந்தது தெரிய வந்தது.

இத குறித்து அவர் அந்தியூர் ரேஞ்சர் உத்தரசாமிக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு உத்ரசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மேலும் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்த காட்டு பன்றியை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட காட்டு பன்றியை வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com