கிணற்றுக்குள் தவறி விழுந்த கட்டுவிரியன் பாம்பு

கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்தது.தீயணைப்பு வீரர்கள் கருவி மூலம் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த கட்டுவிரியன் பாம்பு
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே பி.ஆர்.எஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 30 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது.

இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்ற போது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்தனர்.

பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த பாம்பை சென்னிமலை வன காவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com