search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering College student"

    • அன்பு குமார் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
    • எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளதால் அன்பு குமாரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    நெல்லை, மே.29-

    நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அருகே உள்ள வடுகம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் வனராஜ். லாரி டிரைவர். இவரது மகன் அன்பு குமார் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் அன்பு குமார் வீட்டில் இருந்து வந்தார். அவர் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அன்பு குமார் இறந்தார்.

    திருப்பதியில் குடிபோதையில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி பி.கே. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா. இவரது மகன் நாராயணா (22). இவர் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.

    திருப்பதி பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீனிவாசம் கெஸ்ட் அவுஸ் முன்பாக நாராயணா மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றி கைகலப்பானது. இதில் 4 மாணவர்கள் சேர்ந்து நாராயணாவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த நாராயணாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை நாராயணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து சாய் கணேஷ், ஸ்ரீகாந்த் ஆகிய 2 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    வெள்ளிச்சந்தையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கடத்திய சென்ற மாணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 48). இவரது மகள் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    இங்குள்ள விடுதியில் தங்கி படித்துவந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தந்தை மகளை தேடி கல்லூரிக்கு சென்றார். அங்கு விசாரித்த போது அவரை அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அந்தோணி ராஜ் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும், கல்லூரி விடுமுறை விட்டதை அடுத்து வீட்டுக்கு வருவதாக கூறினார். நான் மகளை தேடி பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அவர் அங்கு வந்து சேர வில்லை. இதனால் எனது மகளை தேடி கல்லூரிக்கு வந்தேன்.

    சக மாணவிகளிடம் விசாரித்த போது எனது மகள் வெள்ளிச்சந்தையில் இருந்து பஸ் ஏறி நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இறங்கியதாக கூறினார்கள். எனது மகளை அதே கல்லூரியில் படிக்கும் வெள்ளிச் சந்தை பகுதியை மாணவர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாகவும் தெரிவித்தனர். எனது மகளை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இது குறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து அந்தோணிராஜின் மகளை கடத்திச் சென்ற மாணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 366 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். 18 வயது நிரம்ப இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்புத்துறைப்பாளையத்தை சேர்ந்தவர் இருதயராஜ். மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் நவீன்ராஜ் (வயது 19). கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருடைய நண்பரான பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பிரகாசின் உடல் நலம் விசாரிக்க அவருடைய வீட்டிற்கு நேற்று நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான சபரீஸ்வரன் (19), பிரகாஷ் (19), கோகுல்நாத் (19) அருண்பாண்டியன் (19) வடுகபாளையத்தை சேர்ந்த மனோஜ் (20), புதுநவக்கொம்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (19), மோகன் (19) ஆகியோர் சென்றனர்.

    அங்கு அவரை பார்த்து விட்டு மதியம் 2 மணிக்கு அனைவரும் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அதன்படி நகராட்சி தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இறங்கி அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நவீன்ராஜ் தண்ணீரில் மூழ்கி னார். உடனே காப்பாற்றுங் கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார்.உடனே அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி நவீன்ராஜ் இறந்தார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை தேடியபோது, அவருடைய உடல் அந்த பகுதியில் மிதந்தது. இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று நவீன்ராஜ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×