search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry beach road"

    • தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
    • நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    புதுச்சேரி:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.

    அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.

    அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

    இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.

    இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.

    அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.

    ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் இன்று 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. கடற்கரை சாலையில் இன்று காலை 7 மணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 500 கல்லூரி மாணவர்கள், 500 யோகா ஆர்வலர்கள் பங்கேற்ற யோகா செயல்விளக்கம் நடந்தது.

    ஈஷா யோகா மையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் மேடையிலிருந்து யோகா செயல்விளக்கம் அளிக்க அதனை மாணவர்கள் பின்பற்றி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பாலன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையாளர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலர் கந்தவேலு, சுற்றுலாத்துறை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    யோகா தினத்தையொட்டி ஆயுஷ் மருத்துவ கண்காட்சி கடற்கரை சாலை கைவினை அங்காடியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

    யோகா தினத்தை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது.

    காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு யோகா செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதை பின்பற்றி கைதிகள் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டார்.

    இதேபோல ஜிப்மர் கலையரங்கில் யோகா தேசிய கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. இந்த பயிற்சியை மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி தொடங்கி வைத்தார். கவர்னர் கிரண்பேடி, ஜிப்மர் இயக்குனர் டாக்டர் விவேகானந்தன், திட்ட இயக்குனர் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
    ×