search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா"

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள்.
    நமது உடலில் வாதம் (காற்று) சரியான விகிதத்தில் இல்லாததால் தச வாயுக்களும் அதன் தன்மையில் இயங்காததால் முக வாத பிரச்சனை வருகின்றது. இதற்கு முத்திரையில் வாயு முத்திரை, அபான முத்திரை, அபான வாயு முத்திரை மூன்றையும் ஒரு சிகிச்சையாக இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

    வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் இருக்கவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    அபான முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல் மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    அபான வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் நடு விரல், மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். உடன் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும், சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கியிருக்கும் . இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளைகளும் பயிற்சி செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள். வாதம், முக வாதம், வாயு பிரச்சனை பசியின்மை, வயிறு உப்பிசம் நீங்கும்.

    இத்துடன் உணவிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். கிழங்கு வகைகள் குறைத்து பழவகைகள் கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரை, பசலை கீரை, தண்டங்கீரை, அரைக்கீரை,உணவில் எடுங்கள். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை மாதம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யாபழம், மாதுளம்பழம், உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
    செய்முறை

    தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.

    இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும். முதுகை நிமிர்த்தி மலர்ந்த கால்களின்மேல் இரு கைகளும் சின்முத்திரை நிலையில் இருக்க வேண்டும்.

    நேர் முகமாக நோக்குதல் வேண்டும், இடை, வயிறு, கண்டம், தலை ஆகியவைகள் சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்த்திருக்க வேண்டும். இதுவே பத்மாசனம் ஆகும்.

    பத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும்.

    சுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.

    யோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும்.

    ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

    பலன்கள்

    வலது கால், இடது தொடையிலும், இடது கால் வலது தொடையிலும் அமுக்கப்படுவதால் வலது பக்க மூளை, இடது பக்க மூளைக்கு நல்ல இரத்த ஓட்டம் செல்லும், மூளை நரம்புகள் சிறப்பாக இயங்கும். மூளை செல்கள் நன்கு பிராண சக்தி பெற்று இயங்கும். வலது மூளை, இடது மூளை மிகச் சிறப்பாக இயங்கும். எதிர்மறை எண்ணங்கள் வராது. நேர்முகமான எண்ணங்கள் அதிகரிக்கும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் பயன்படுகிறது.

    சுவாச சம்பந்தமான நோய்கள் வராது. முதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும். வாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.

    ×