search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்திரை"

    பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.
    ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.

    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.

    தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள் :

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
    பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
    செய்முறை :

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    பலன்கள் :

    நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

    பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
    உடலில் கழிவுகள் தேக்கத்தினால் தலைசுற்றல் ஏற்படும். இப்பொழுது தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் வராமல் வாழ்வதற்குரிய முத்திரைகளைக் காண்போம்.
    பிரிதிவி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனி க்கவும். பின் மோதிரவிரல், பெருவிரல் நுனியை இணை க்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
    இதனால் மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். தலைசுற்றல், மயக்கம் வருவது தடுக்கப்படுகின்றது. மண்ணீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    சூன்ய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். பெண்கள் மாத விடாய் காலத்தில் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். இதயம், இதய வால்வுகள் நல்ல சக்தி ஓட்டம் பெற்று இயங்கும். இதயத்துடிப்பு சீராகும். அதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். தலை சுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் வராமல் வாழலாம்.

    பிராண முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் சுண்டு விரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரல் நுனியை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    சிறுநீரகம் நன்றாக இயங்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். பய உணர்வு இருக்காது. சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் பிராண சக்தி எல்லா இடங்களிலும் நன்றாக பரவும். அதனால் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை செய்கின்றது.

    முகுள முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    ஆதி முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.

    மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக தினமும் மூன்று வேளை பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ராஜ உறுப்புக்கள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். அதனால் உடல், மன சோர்வு நீங்கி, மயக்கம், தலைசுற்றல் வராமல் வளமாக வாழலாம்.

    உணவு

    பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசி பழம், அத்தி பழம், மாதுளம்பழம், கருப்பு திராட்சை இதை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
    புதினா கீரை, கொத்தமல்லி, அரைக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, அரைக்கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இளநீர், தேங்காய், வாழைப்பழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    கருப்பு உளுந்து கஞ்சி, உளுந்து தோசை, கருப்பு உளுந்து களி, வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.முளைகட்டிய பயிறு அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் குறைத்து பழச்சாறு, பழம் சாலட், வெஜிடபுள் சாலட் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

    வாரம் ஒரு முறை அருகம்புல், துளசி, வில்வம் ஒரு கைப்பிடி எடுத்து கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றியவுடன் வடிகட்டி அரை டம்ளர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை குடிக்கவும்.

    வேப்ப இலை கொழுந்து மாதம் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு பறித்து தண்ணீரில் கழுவி காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடவும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள்.
    நமது உடலில் வாதம் (காற்று) சரியான விகிதத்தில் இல்லாததால் தச வாயுக்களும் அதன் தன்மையில் இயங்காததால் முக வாத பிரச்சனை வருகின்றது. இதற்கு முத்திரையில் வாயு முத்திரை, அபான முத்திரை, அபான வாயு முத்திரை மூன்றையும் ஒரு சிகிச்சையாக இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

    வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் இருக்கவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    அபான முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல் மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    அபான வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் நடு விரல், மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். உடன் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும், சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கியிருக்கும் . இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளைகளும் பயிற்சி செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள். வாதம், முக வாதம், வாயு பிரச்சனை பசியின்மை, வயிறு உப்பிசம் நீங்கும்.

    இத்துடன் உணவிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். கிழங்கு வகைகள் குறைத்து பழவகைகள் கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரை, பசலை கீரை, தண்டங்கீரை, அரைக்கீரை,உணவில் எடுங்கள். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை மாதம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யாபழம், மாதுளம்பழம், உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    கீழே கொடுக்கப்பட்டுள்ள முத்திரைகள் அனைத்தும் மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்கச் செய்யும். மூளை செல்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
    எளிமையான மூச்சுப்பயிற்சி

    நிமிர்ந்து அமருங்கள். இரு நாசிவழியாக மிக மிக மெதுவாக மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இப்படி செய்யும் பொழுது மூளைக்கு நன்கு பிராண சக்தி கிடைக்கின்றது. மூளை நரம்பு மண்டலங்கள் பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்குகின்றது. இதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

    பிரிதிவி முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மாலை இரு வேளையும் செய்யவும்.

    ஹாக்கினி முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் எல்லா கை விரல் நுனிகளையும் சேர்த்து படத்தில் உள்ளதுபோல் ஒரு பந்து வடிவில் வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும். காலை / மாலை இரு வேளையும் பயிற்சி செய்யலாம்.

    பலன்கள்

    மேற்குறிப்பிட்ட முத்திரைகள் அனைத்தும் மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்கச் செய்யும். மூளை செல்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
    ×