search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் பல்வேறு வீடுகளில் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    திண்டிவனத்தில் பல்வேறு வீடுகளில் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது.
    • அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை போன்ற காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது. இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ஒலக்கூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் 2 பேரும் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதில் ஒருவர் வானூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 23), வானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் இவர்கள் 2 பேரும் யாரும் இல்லாத வீட்டை நோட்டமிட்டு பணம் நகையை கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலீசார் இவர்களிடம் இருந்த 7 பவுன் தங்க நகை, செல்போன், லேப்டாப் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்து முருகனை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை விழுப்புரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்த சிறார் இல்லத்தில் சேர்த்தனர்.

    Next Story
    ×