search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்"

    • வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.
    • புதிய பாதை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

    சென்னை:

    ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.

    சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

    ரெயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதனை உறுதிப் படுத்தவும் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    சென்னை-பெங்களூரு இடையேயான 360 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


    தற்போது வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது. அதைவிட பயண நேரம் குறையும் வகையில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கான அடிப்படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகிவிடும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள தண்டவாளத்தில் செமி அதிவேக ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள வழித் தடத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாக நாங்கள் பயன்படுத்தலாம். சில வழித் தடங்களில் அல்லது ரெயில் நிலையங்களில் புதிய பாதை அமைக்கலாம். மற்றப்படி ஏற்கனவே உள்ள தண்டவாளங்களை மேம்படுத்தி ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

    • தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
    • மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் பிப்ரவரி 4-ந்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே ஓடும் சிறப்பு ரெயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
    • ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு புறப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 29-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (30-ந்தேதி) 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    அதே போல் கோவையில் இருந்து நாளை 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 29-ந்தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
    • சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சென்னை- நாகர்கோவில் இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்றும் நாளையும் (13 மற்றும் 14-ந்தேதி) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    நாகர்கோவிலில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 11.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

    • கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
    • பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை மார்க்கங்களில் இயக்கப்படுகின்ற ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    சிறப்பு ரெயில்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    இந்த நிலையில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இன்று அறிவிக்கப்பட்டன. 16, 17-ந்தேதிகளில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    தாம்பரத்தில் இருந்து 17, 18-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது.

    இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக தாம்பரம் வந்து சேருகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

    பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூருவில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து 12-ந்தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு பகல் 12 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி கோட்டை வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை சென்னையில் இருந்து வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடைகின்றது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப் பட்டு செல்கிறது.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகின்றது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணா மலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திரு வண்ணாமலையில் இருந்து 27-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களுக்கு துரிதமாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்பு சற்று குறைவாக இருந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் நீரில் மூழ்கின. 2 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதம் அடைந்தன.

    நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது. பஸ், ரெயில் போக்குவரத்துகள் தொடங்கியது. மின் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களுக்கு துரிதமாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுடன் 7 நாட்களாகியும் சில இடங்களில் மக்களின் துயரம் தீரவில்லை.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகர், ஏரல், ஆத்தூர், முக்காணி, ஆழ்வார் தோப்பு, அகரம், வசவப்பபுரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இன்னும் வெள்ளம் வடியாமல் தீவுகளாகவே காட்சி அளிக்கின்றன. பழையகாயல், புன்னக்காயல், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி 4 வழிச்சாலை, புதிதாக கட்டப்பட்ட ஆற்று பாலங்கள், திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின்ரோடு உள்ளிட்டவைகளும் பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.


    பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் உள்ள நிலையில், அரசு சார்பிலும், தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் நிவாரணங்கள், உணவு, உடை வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நெல்லையில் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் பாதிப்படைந்த மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், இந்த மாவட்டங்களில் லேசான பாதிப்பு மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்கள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. வேளாண்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து இந்த பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

    முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகா தேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட 8 தாலுகாக்களிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்றும், இன்றும் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 10 தாலுகாக்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் 68 ஆயிரம் ஏக்கரில் பிசான பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சுமார் 70 சதவீதம் வரை நெற்பயிர்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் முழுமையான சேத விபரங்கள் தெரிய வரும். கால்நடைகள் சேதம், மனித உயிரிழப்பு உள்ளிட்டவையும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 பேர் வரவழைக்கப்பட்டு ள்ளனர். அவர்கள் இன்று முதல் அனைத்து பகுதிக்கும் சென்று கால்நடை சேதம், பயிர்சேதம், உயிர்சேதம், வீடு சேதம் உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கின்றனர். 2 அல்லது 3 நாட்களில் கணக்கெடுப்பு முடிவடையும். ஒவ்வொரு குழுக்களுக்கு ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் பாஸ்போர்ட், ஆதார் ஆட்டை, ரேஷன் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்காக 2 நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று சான்றுகளை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    வெள்ளத்தில் சேதமடைந்த பெரிய மற்றும் சிறிய பாலங்கள் கிராம நிர்வாக அலுவவர்கள், போலீசார் மூலம் கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. கடந்த 6 நாட்களாக துண்டிக்கப்பட்ட தொலை தொடர்பை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    எளிமையான முறையில் விரைவாக கணக்கெடுத்து உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பாதிப்படைந்த பகுதிகளுக்கான பட்டியலை அரசுக்கு வழங்கியவுடன் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    உயிரிழப்பு தொடர்பான கணக்கெடுப்புகளும் துரிதமாக நடந்து வருகிறது. விவசாய பாதிப்பு கணக்கெடுப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
    • ரெயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அணைகளில் இருந்து சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் மட்டும் இன்றி அதனையொட்டி உள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல்வேறு குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம், தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியது. அப்போது ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திற்கு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 800 பயணிகள் கடும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    எனினும் ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையம் பலத்த சேதம் அடைந்துள்ளது.

    குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் சேவைகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளாா்.

    கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும்.

    தொடா்ந்து திங்கள் கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் வழக்கமான சேவை இயக்கப்படும். இதில் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06421) போத்தனூருக்கு காலை 5.35 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு காலை 5.54 மணிக்கும், பொள்ளாச்சிக்கு காலை 6.25 மணிக்கும் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06422) கிணத்துக்கடவுக்கு இரவு 9.18 மணிக்கும், போத்தனூருக்கு இரவு 9.44 மணிக்கும் கோவைக்கு இரவு 10.15 மணிக்கும் வந்தடையும்.

    இதுபோல் ஏற்கனவே கோவை-பொள்ளாச்சி இடையே வாரத்தின் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர) இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06419/06420) திங்கள்கிழமை முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் 29 மற்றும் ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
    • நெல்லையிலிருந்து எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 28, மற்றும் ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    சென்னை:

    தைப்பூசம் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்- நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.060609) இன்று (வெள்ளிக்கிழமை), 29 மற்றும் ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

    மறுமார்க்கமாக, நெல்லையிலிருந்து எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070) வரும் 28, மற்றும் ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
    • திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவிக்கும் 500 பயணிகளை மீட்க அரசும், ரெயில்வே துறையும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயிலில் உள்ள பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்களை அழைத்து வர 13 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் ரெயில் நிலையம் அருகில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு 38 கி.மீ. தூரமாகும். அங்கு வந்து சேரும் பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில் முழுக்க முழுக்க வெள்ளத்தால் வழியில் சிக்கிக் கொண்ட பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயிலில் உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவை உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை வந்து சேரும் வரையில் உணவு அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய வது:-

    திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும். எத்தனை பெட்டிகள், எப்போது ரெயில் புறப்படும் என்பது போன்ற தகவல்கள் பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டு வந்த பிறகு தான் தெரிய வரும் என்றார்.

    ×