என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கன்னியாகுமரி-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
ByMaalaimalar27 Jan 2024 8:23 AM GMT
- தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
- ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை:
தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு புறப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 29-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (30-ந்தேதி) 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
அதே போல் கோவையில் இருந்து நாளை 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 29-ந்தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X