என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாதிக்கப்பட்ட 500 பேரை சென்னைக்கு அழைத்துவர சிறப்பு ரெயில் ஏற்பாடு
- 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
- திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும்.
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவிக்கும் 500 பயணிகளை மீட்க அரசும், ரெயில்வே துறையும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயிலில் உள்ள பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.
அங்கிருந்து அவர்களை அழைத்து வர 13 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் ரெயில் நிலையம் அருகில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு 38 கி.மீ. தூரமாகும். அங்கு வந்து சேரும் பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில் முழுக்க முழுக்க வெள்ளத்தால் வழியில் சிக்கிக் கொண்ட பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில் மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயிலில் உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவை உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை வந்து சேரும் வரையில் உணவு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய வது:-
திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும். எத்தனை பெட்டிகள், எப்போது ரெயில் புறப்படும் என்பது போன்ற தகவல்கள் பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டு வந்த பிறகு தான் தெரிய வரும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்