search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் ரத்து
    X

    நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் ரத்து

    • ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
    • ரெயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அணைகளில் இருந்து சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் மட்டும் இன்றி அதனையொட்டி உள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல்வேறு குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம், தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியது. அப்போது ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திற்கு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 800 பயணிகள் கடும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    எனினும் ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையம் பலத்த சேதம் அடைந்துள்ளது.

    குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் சேவைகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×