search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்"

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது
    • பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதற்கு முன்னதாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
    • இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்ற நிலை உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    வந்தே பாரத் உள்ளிட்ட எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே நாளை (11-ந்தேதி) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து வருகிற 12, 19, 26 ஆகிய நாட்கள் மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து வருகிற 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் வியாழக்கிழமை தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட் விரைவாக புக்கிங் ஆனது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். இந்த மாதம் மட்டுமின்றி மே மாதத்திற்கும் இடங்கள் நிரம்பி விட்டன. இரண்டு வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 100 முதல் 200 வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.

    ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படுக்கைகள் மட்டும் ஒரு சில நாட்களில் காலியாக உள்ளன.

    தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் பயணத்தை விட கட்டணம் குறைவாக இருப்பதோடு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதால் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அலை அலையாக திரண்டு வருகிறார்கள்.

    சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலும் முழு அளவில் செல்கிறது. தற்போது கோடை வெயில் வறுத்தெடுப்பதால் குளு குளு ஏசி வசதியுடன் சொகுசாக பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். இதனால் இந்த ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

    • கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் (வியாழக்கிழமை மட்டும்) புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12,19,26, மே 3, 10, 17, 24, 31 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06069) அடுத்தநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
    • தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.

    இந்த காலகட்டங்களில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.

    சென்னை:

    பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாள் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கு நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    கடற்கரை எழும்பூர் வரையிலான 4வது பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

     

    இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் மின்சார ரெயிலில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஹோலி பண்டிகையையொட்டி ரெயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை- நாகர்கோவில் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
    • பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

    பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

    இதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இதுபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

    பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆவடியுடன் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.
    • புதிய பாதை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

    சென்னை:

    ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.

    சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

    ரெயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதனை உறுதிப் படுத்தவும் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    சென்னை-பெங்களூரு இடையேயான 360 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


    தற்போது வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது. அதைவிட பயண நேரம் குறையும் வகையில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கான அடிப்படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகிவிடும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள தண்டவாளத்தில் செமி அதிவேக ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள வழித் தடத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாக நாங்கள் பயன்படுத்தலாம். சில வழித் தடங்களில் அல்லது ரெயில் நிலையங்களில் புதிய பாதை அமைக்கலாம். மற்றப்படி ஏற்கனவே உள்ள தண்டவாளங்களை மேம்படுத்தி ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

    • தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
    • மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் பிப்ரவரி 4-ந்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே ஓடும் சிறப்பு ரெயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
    • ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு புறப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 29-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (30-ந்தேதி) 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    அதே போல் கோவையில் இருந்து நாளை 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 29-ந்தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.

    ×