search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெஜ்ரிவால்"

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என முதல் மந்திரி மனுதாக்கல் செய்தார்.
    • கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் இன்று நிராகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

    டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.
    • டெல்லி உயர்நீதிமன்றம் சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க மறுத்துவிட்டது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    தனக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 7-வது மற்றும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியபோது நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இதற்கிடையே 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டாம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படும். அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.

    ஒன்பது சம்மனுக்கும் எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜரானால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.

    இருந்தபோதிலும், சம்மன் அனுப்பியதற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் கேட்டுக்கொண்டதுடன் வழக்கை ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டு.
    • விசாரணை என்ற பெயரில் கைது செய்ய முயற்சி என பா.ஜனதா மீது விமர்சனம்.

    டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் இரண்டு மந்திரிகளை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் அம்மாநில முதல்வரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். நான் எந்த தவறும் செய்யவில்லை என கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார்.

    கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை மூலம் பா.ஜனதா அழிக்க பார்க்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மேலும் சோதனை என்ற பெயரில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்வதுதான் அமலாக்கத்துறையின் குறிக்கோள். இதன் மூலம் மக்களவை தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா முடக்க நினைக்கிறது என்றும் குற்றம்சாட்டியது.

    ஆறு முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏழாவது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, எப்படி சம்மன் அனுப்ப முடியும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நீதிமன்றம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், மார்ச் 16-ந்தேதி நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    • ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதி பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள்.
    • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது.

    INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு CBI நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டல் விடுக்கிறார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை 6 சம்மன்களை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன .டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

    • நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை,
    • உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப் 20) தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக, இன்று டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்ட உரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை, அதனால் தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவிக்கும் போது அதனை கடவுளின் தீர்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    பாஜகவின் பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடவுளே வந்து அம்பலப்படுத்தினார். பாஜக தேர்தலில் நியாயமாக வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் வெற்றி தேடியதை வீடியோ ஆதாரம் மூலமாக இந்திய நாடே பார்த்தது என்று பேசியுள்ளார்.

    • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
    • ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. சிக்கலான நேரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாட்டையும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.விற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

    • தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
    • பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.

    இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

    சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

    இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • நீங்கள் என்னை கைது செய்தால் ஆம் ஆத்மி முடிந்து விடும் என நினைக்கலாம்.
    • ஆனால், நீங்கள் கெஜ்ரிவாலின் எண்ணங்களை (கருத்துகள்) எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும்?.

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக குதிரை பேரம் நடைபெறுவதாக பா.ஜனதா கட்சி மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

    அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி கட்சி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கிது. அதனால்தான் எல்லா பக்கத்தில் இருந்தும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்று யாரையாவது பார்த்து பா.ஜனதா பயப்படுகிறது என்றால், அது ஆம் ஆத்மி தான்.

    பா.ஜனதா 2024 மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்படவில்லை என்றால், அதன்பின் 2029-ல் பா.ஜனதாவிடம் இருந்து இந்தியாவை ஆம் ஆத்மி விடுவிக்கும்.

    நீங்கள் என்னை கைது செய்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு முடிவு கட்டிவிடலாம் என நினைக்கலாம். ஆனால், நீங்கள் கெஜ்ரிவாலின் எண்ணங்களை (கருத்துகள்) எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும்?.

    அவர்கள் ராம் பக்தர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், எங்களுடைய மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கான மருந்துகளை தடுக்கிறார்கள். ஏழை மக்களுக்கான மருந்துகளை தடுத்து நிறுத்த கடவுள் ராம் கூறினாரா?.

    என்னை தாக்கினார்கள். செருப்பு வீசினார்கள். மை வீசினார்கள். தற்போது அவர்கள் என்னை கைது செய்ய விரும்புகிறார்கள் என பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து பா.ஜனதாவை தாக்கினார்.

    • பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவில் சென்று பிரார்த்தனை செய்கிறார்.
    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் நேரத்தில் மம்தா பயணம் மேற்கொள்கிறார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி வருகிற 21-ந்தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அத்துடன் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கே செல்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
    • இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்மேல் சம்மனாக கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய பலரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி கூறியதாவது:-

    கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மதுபான ஊழல் என்ற பெயரில் இது நடந்து வருகிறது. சிலரின் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது. சிலருக்கு சம்மன் கொடுக்கப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டும்கூட, அமலாக்கத்துறையால் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப முடியவில்லை.

    இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றமும் ஆதாரங்களை வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    ஆம் ஆத்மி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி பொருளாளர், எம்.பி. குப்தா, கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் பலருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ அழிக்கப்பட்டுள்ளது. அதை நாட்டு மக்களுக்கு முன் கொண்டு வாரங்கள் பார்ப்போம். ஆம் ஆத்மி கட்ச தலைவர்கள் குரலை ஒடுக்கவதற்காக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக போலி அறிக்கைகள் வழங்குமாறும் அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துகிறது. மிரட்டுகிறது.

    மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், நாங்கள் பயப்படமாட்டோம் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

    அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை நாளை (இன்று) 10 மணிக்கு வெளிப்படுத்த இருக்கிறேன் எனக் குறிப்பிடடிநர்தார். அவருடைய மந்திரி சபையில் இருக்கும் சவுரப் பரத்வாஜ், பா.ஜனதாவின் பணம் சுரண்டும் துறையின் மிகப்பெரிய அம்பலம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் இன்று காலை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

    • டெல்லி மாநில மந்திரி அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
    • அவர் தெரிவித்த மறுநாள் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பணமோசடி தொடர்பான வழக்கு தொடர்பான சோதனையா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனையா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

    கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், டெல்லி ஜல் போர்டு முன்னாள் உறுப்பினர் ஷலாப் குமார், மாநிலங்களை எம்.பி. அலுவலகம், தேசிய பொருளாளர் என்.டி. குப்தா ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    டெல்லி மாநில மந்திர அதிஷி, எஜென்சியின் அம்பலத்தை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஏழு எம்.எல்.ஏ.-க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற்றதாக பா.ஜனதா மீது குற்றச்சாட்டு.
    • டெல்லி போலீசின் குற்றப்பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்று வருகிறது என்றே சொல்லலாம். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கெஜ்ரிவால் அரசுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்து வருவதாக மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பா.ஜனதா குதிரை பேரம் பேசுகிறார்கள். எங்களுடைய எம்.எல்.ஏ.-க்கு தலா 25 கோடி ரூபாய் தருவதாக ஏழு பேரிடம் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

    ஆனால், பா.ஜனதா இதை முற்றிலும் மறுத்தது. டெல்லி காவல்துறையில் புகார் அளித்தது. இது தொடர்பாக டெல்லி போலீசாரின் குற்றப்பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியது. குதிரை பேரம் பேசப்பட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் டெல்லி ரோஹினியில் பள்ளி கட்டடத்தை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எதுவும் நடக்காது. அவர்களுக்கு நான் அடிபணியமாட்டேன். பா.ஜனதாவுக்கு வாருங்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார்கள். ஒருபோதும் அவர்களுடன் சேரமாட்டேன். அவர்களை எங்களை மன்னிக்க நாங்கள் என்ன குற்றம் செய்தோம்.

    நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், கிளினிக், சாலைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    ×