search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கூட்டணி"

    • ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதி பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள்.
    • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது.

    INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு CBI நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டல் விடுக்கிறார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை 6 சம்மன்களை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன .டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

    • தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
    • ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சனாதன தர்மம் என்பது காலங்காலமாக மாறாமல் இருப்பதை அப்படியே பின்பற்றுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டது. மாறாமல் இருக்க முடியாது. ஏற்றதாழ்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளை கொண்டதே சனாதன தர்மம். பிறப்பில் ஏற்றதாழ்வுகளை பின்பற்ற சொல்கிறது.

    மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை அழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, இந்து மதத்துக்கு எதிர்ப்பாளர் போல் திரித்து பரப்பிவிட்டனர். தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. தி.மு.க.வினரை இந்து விரோதிகள் போல் சித்தரிக்கிறார்கள்.

    மதசார்பற்ற இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்தியா என்ற சொல்லையே மாற்ற விரும்புகிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்றிவிட்டனர். 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைக்கிறார். ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தின் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சோ்த்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு
    • மக்களின் மனதில் நீங்காத இடத்தை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்கிறது.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முதலில் விதித்திட்டது திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் பணிகளையும், தமிழகத்தின் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சோ்த்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு. அண்ணா காட்டிய வழியை கருணாநிதி பின்பற்றினார். அந்த மரபை தொடர்ச்சியாக செயல்படுத்தி தமிழகத்தில் தலை சிறந்த ஆட்சியை அளிக்கிறார் மு.க.ஸ்டாலின். நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது.

    இந்தியாவிலேயே ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடத்தை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்கிறது. பா.ஜனதா கட்சி ஆட்சி இதுவரை இல்லாத அளவிற்கு பல வேதனைகளை மக்களுக்கு உருவாக்கி இருக்கின்றது.

    உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பல காரியங்கள் செய்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது நீட் தேர்வு இருக்காது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களால் கருணாநிதியின் நூற்றாண்டு விழா எழுச்சியோடு இன்று கொண்டாடப்படுகிறது.

    அண்ணாவின் பெயர் சொல்லாமல் தமிழகத்தில் அரசியல் கிடையாது. இந்த நாட்டில் அண்ணா, பெரியார், கலைஞர் பிறந்திருக்காவிட்டால் நமது கதி என்னவென்று நினைத்து பாருங்கள்.

    திராவிட கழகம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுவுடமை ஆகும். வரலாற்றை பார்த்தால் தெரியும் தி.மு.க.விற்கு பதவி சுகம் இல்லை எனவும் தமிழர்களின் உரிமையை பாதுகாத்து மீட்டுக்கொண்டு வருவதும் ஆகும். காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக மாணவ- மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.பெர்னார்டு, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×