search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் லியோனி"

    • தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
    • ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சனாதன தர்மம் என்பது காலங்காலமாக மாறாமல் இருப்பதை அப்படியே பின்பற்றுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டது. மாறாமல் இருக்க முடியாது. ஏற்றதாழ்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளை கொண்டதே சனாதன தர்மம். பிறப்பில் ஏற்றதாழ்வுகளை பின்பற்ற சொல்கிறது.

    மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை அழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, இந்து மதத்துக்கு எதிர்ப்பாளர் போல் திரித்து பரப்பிவிட்டனர். தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. தி.மு.க.வினரை இந்து விரோதிகள் போல் சித்தரிக்கிறார்கள்.

    மதசார்பற்ற இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்தியா என்ற சொல்லையே மாற்ற விரும்புகிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்றிவிட்டனர். 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைக்கிறார். ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
    • மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் புத்தகங்கள் பள்ளி தொடங்கிய நாளிலேயே வழங்கப்பட்டு விட்டன. சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதால் 10 சதவீதம் கூடுதலாக தமிழ் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பெண்களின் வாழ்க்கைத்தரத்தை பொருளாதாரத்தில் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் ஆகும். கல்விக்காக மிகப்பெரும் திட்டங்களை கலைஞர் கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் 'செம்மொழி நாயகன் கலைஞர்' அல்லது 'தமிழகத்தின் சிற்பி கலைஞர்' என்ற புதிய பாடம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு ஒரு தலைவர் இருக்கிறார் அண்ணாமலை.
    • தி.மு.க. என்ற ஆலமரத்தோடு மோதிய எவரும் ஜெயித்தது இல்லை என்பதை அவர் இன்னும் உணரவில்லை என்றார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது:-

    பி.ஜே.பி. என்றால் ஜொள்ளு பார்ட்டி என்றுதான் எல்லோரும் சொல்லுகிறார்கள். உண்மையில் அங்கு அதுதான் நடக்கிறது. எவ்வளவு பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்கூட சிக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு ஒரு தலைவர் இருக்கிறார் அண்ணாமலை. அவர் எதை பார்த்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர். எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர். இப்படித்தான் ஒரு போலீஸ் எஸ்.பி. 5 மாடி கட்டிடம் ஒன்றில் மாட்டிக் கொண்டார். கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. ஐயோ என்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். உடனே போலீஸ்காரர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். 4 பேர் கீழே ஒரு வலையை பிடித்துக் கொண்டு சார் நீங்கள் அப்படியே குதித்து விடுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கிறோம்" என்றார்கள். அவரும் அதை நம்பி மேலிருந்து கீழே குதித்தார். அவர் வலையை நெருங்கி வரும் போது வருவது எஸ்.பி. என்றதும் நாலு பேரும் வலையை விட்டுவிட்டு விறைப்பாக நின்றபடி சல்யூட் அடித்தார்கள். நிலைமை என்ன ஆகி இருக்கும் பாருங்கள். கீழே விழுந்து கை, கால்கள், முகம் எல்லாம் உடைந்து போனதுதான் மிச்சம்.

    இதே நிலையைத்தான் அண்ணாமலையும் சந்திப்பார். தி.மு.க. என்ற ஆலமரத்தோடு மோதிய எவரும் ஜெயித்தது இல்லை என்பதை அவர் இன்னும் உணரவில்லை என்றார்.

    இந்த கதையை லியோனி தன் பாணியில் சொன்னதும் கூட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.

    • அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயகுமார் இயக்கியுள்ள படம் 'அற்றைத்திங்கள் அந்நிலவில்'.
    • இப்படத்தின் விழாவில் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார்.

    அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயகுமார் இயக்கியுள்ள 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- "என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரன்ஸ் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இன்னொரு மாணவர் பாபு ஆண்டனி. இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை. பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள். படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு காதல் காட்சிகள் இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் இவர்கள், அதை மிக நாகரிகமாக கையாண்டிருக்கிறார்கள்.

     

    அற்றைத்திங்கள் அந்நிலவில் படக்குழு

    அற்றைத்திங்கள் அந்நிலவில் படக்குழு

    ரத்தம், சண்டை காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துப்போய் வெறுத்துப்போன ரசிகர்களுக்கு இந்த 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' படம் புதிய அனுபவத்தை கொடுப்பதுடன், ஒரு விருந்தாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை. சினிமாவில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் நடிக்கும்போது, ஒரே ஒரு உணர்ச்சியை காட்டுவதற்காக நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது தான் புரிந்தது, நடிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல." இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள்.
    • எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் பிரபு, செயலாளர் டில்லி பாபு ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், திண்டுக்கல் லியோனி மீது புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் திண்டுக்கல் லியோனி இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.

    ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள். எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்.

    கோவிலில் பொங்கல் வாங்கி தின்றுவிட்டு கையை துடைக்க துணி எடுத்து வரவில்லை என்று சுவற்றில் துடைத்து விட்டு கையை முகர்ந்து பார்த்து உள்ளார். அதை 15க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்து அங்கே ஏதோ ஒரு சாமி இருக்குடா வணங்குகிறான்.

    நம்ம எல்லாரும் விட்டுட்டோமே என்று அனைவரும் வரிசையில் நின்று அந்த இடத்தை தொட்டுத் தொட்டு கும்பிடுவார்கள். இரண்டு மாதம் கழித்து ஆயிரம் பேர் தொட்டு கும்பிடுவார்கள்.

    ஒரு வருடம் கழித்து அந்த இடத்தில் கும்பாபிஷேகமே நடக்கும்.

    ஒருவன் பொங்கல் தின்றுவிட்டு கையை துடைத்த இடத்தையே சாமி ஆக்கிட்டார்களே என்று இந்துக்கள் மனது மிகவும் வேதனை அடையும் அளவிற்கு பேசியுள்ளார்.

    யாகம் வளர்க்கும் முறை மிகவும் நேர்த்தியானது. சக்தி வாய்ந்ததாக இந்துக்கள் கருதுகின்றனர்.

    கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் இந்து மதம். இந்துக்களின் மனதை மிகவும் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் லியோனி பேசியுள்ளார்.

    எனவே அவர் வகிக்கும் பாட நூல் கழக தலைவர் பதவியை சட்டப்படி நீக்க ஆவன செய்ய வேண்டும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×