search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2029-ல் பாஜக-விடம் இருந்து இந்தியாவை ஆம் ஆத்மி விடுவிக்கும்- கெஜ்ரிவால் சூளுரை
    X

    2029-ல் பாஜக-விடம் இருந்து இந்தியாவை ஆம் ஆத்மி விடுவிக்கும்- கெஜ்ரிவால் சூளுரை

    • நீங்கள் என்னை கைது செய்தால் ஆம் ஆத்மி முடிந்து விடும் என நினைக்கலாம்.
    • ஆனால், நீங்கள் கெஜ்ரிவாலின் எண்ணங்களை (கருத்துகள்) எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும்?.

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக குதிரை பேரம் நடைபெறுவதாக பா.ஜனதா கட்சி மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

    அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி கட்சி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கிது. அதனால்தான் எல்லா பக்கத்தில் இருந்தும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்று யாரையாவது பார்த்து பா.ஜனதா பயப்படுகிறது என்றால், அது ஆம் ஆத்மி தான்.

    பா.ஜனதா 2024 மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்படவில்லை என்றால், அதன்பின் 2029-ல் பா.ஜனதாவிடம் இருந்து இந்தியாவை ஆம் ஆத்மி விடுவிக்கும்.

    நீங்கள் என்னை கைது செய்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு முடிவு கட்டிவிடலாம் என நினைக்கலாம். ஆனால், நீங்கள் கெஜ்ரிவாலின் எண்ணங்களை (கருத்துகள்) எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும்?.

    அவர்கள் ராம் பக்தர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், எங்களுடைய மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கான மருந்துகளை தடுக்கிறார்கள். ஏழை மக்களுக்கான மருந்துகளை தடுத்து நிறுத்த கடவுள் ராம் கூறினாரா?.

    என்னை தாக்கினார்கள். செருப்பு வீசினார்கள். மை வீசினார்கள். தற்போது அவர்கள் என்னை கைது செய்ய விரும்புகிறார்கள் என பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து பா.ஜனதாவை தாக்கினார்.

    Next Story
    ×