search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • டிராவிஸ் ஹெட், ரவீந்திர சச்சின் ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.
    • மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச்- மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் ஐ.பி.எல். தேதி முடிவு செய்வது என்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கருதியுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள். இதில் 30 இடம் வெளிநாட்டு வீரர்களுக்கானது. 10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை போவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஆர். அஸ்வின் வீரர்கள் ஏலம் தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவரை விடுவித்துள்ளது. அவர் ரூ.10 முதல் 14 கோடிக்கு விலை போகலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

    ஹர்ஷல் படேல் ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், சச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும், கோயட்சே (தென்ஆப்பிரிக்கா) ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், போவெல் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும் விலை போகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட் ரூ.4 கோடி வரைதான் ஏலம் போவார் என்று கணித்துள்ளர். உமேஷ் யாதவுக்கு ரூ.4 முதல் ரூ.7 கோடி வரை கணித்துள்ளார்.

    • எனது பயிற்சியாளர்களில் அஸ்வினும் ஒருவர் என ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் கூறினார்.
    • அஸ்வினிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

    சிட்னி:

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனியார் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அஸ்வின் உலகத்தரம் வாய்ந்தவர். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

    நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் அந்த 500 விக்கெட்களை எட்டுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்களும், நாதன் லயன் 496 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.
    • தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உடைகள் காவி நிறத்தில் இருந்தன. தொப்பியும் காவி நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஆனால், தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    இது தமிழகத்தில் காவிக்கு இடமில்லை என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்
    • ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு

    உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஸ்மித், 4. மார்னஸ் லபுசேன், 5. கேமரூன் கிரீன், 6. ஜோஷ் இங்க்லிஸ் (விக்கெட் கீப்பர்), 7. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 8. மேத்யூ ஷார்ட், 9. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 10. சீன் அப்போட், 11. ஆடம் ஜம்பா

    இந்திய அணி விவரம்:-

    1. சுப்மான் கில், 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 5. இஷான் கிஷன், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. ஷர்துல் தாக்குர், 10. பும்ரா, 11. முகமது ஷமி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் நட்சத்திர ஜோடியாக அஸ்வின்- ஜடேஜா ஜோடி திகழ்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் இருவரும் இணைந்து விளையாடியது கிடையாது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆறு வருடத்திற்கு முன் இருவரும் இணைந்து விளையாடினர். அதன்பின் தற்போது சேர்ந்து விளையாடுகிறார்கள்.

    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.
    • தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

    உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த அணியில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.

    தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உள்ளூரில் உலகக்கோப்பை நடப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கோப்பையை நாம் அனைவரும் வீட்டிற்கு கொண்டு வருவோம் என கூறினார்.

    • கிரிசிற்குள் நில்லுங்கள் நிம்மதியாக வாழுங்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    • நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை பரூக்கி மன்கட் செய்தார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி.

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கட் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

    பவுலர் ஆக்ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியதுதானே" என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு.

    இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா.

    சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
    • இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.

    அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.

    • பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கேப்டனான பாண்ட்யா டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் பும்ராவுடன் இணைந்துள்ளார். பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் 3-வது இடத்தை பாண்ட்யா பிடித்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் (72) உள்ளார். பும்ரா 70 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்
    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 75 டெஸ்ட் விக்கெட்

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 2-வது இன்னிங்சில் இதுவரை வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    கபில்தேவ் 89 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 712 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    • அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீட்சா 3.
    • இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. தற்போது மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கியுள்ளார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் பீட்சா 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. சென்னையை சேர்ந்த 36 வயதான அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். நேற்றும் அஸ்வின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் அவர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    உலகின் முதல் வரிசை பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த டெஸ்டில் 12 விக்கெட் (முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 7) கைப்பற்றினார்.

    அஸ்வின் 8-வது முறையாக டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்தார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.

    அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    முரளிதரன் (இலங்கை) 22 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 10 தடவையும், ஹேட்லி (நியூசிலாந்து), ஹெராத் (இலங்கை) தலா 9 முறையும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.

    அஸ்வின் ஒரு இன்னிங்சில் 34-வது தடவையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் ஹெராத்துடன் அவர் இணைந்தார்.

    முரளிதரன் 67 முறையும், வார்னே 37 தடவையும், ஹேட்லி 36 முறையும், கும்பளே 35 தடவையும் ஒருஇன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர். இந்த வரிசையில் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் அஸ்வின் 6-வது தடவையாக இரண்டு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். முரளிதரன் (11), ஹெராத் (8) ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் இருக்கிறார்.

    அஸ்வின் 2-வது இன்னிங்சில் 71 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசில் இந்திய வீரர்களின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இஷாந்த் சர்மா 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 131 ரன் கொடுத்து 12 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    ×