search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • வருகிற 22-ந் தேதி சென்னையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த போட்டியின் டிக்கெட்டுகள் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட்டுக்கு டிமெண்ட் இருக்கிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் காண என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். உதவி செய்யுங்கள் சிஎஸ்கே நிர்வாகம்.

    என அஸ்வின் கூறியிருந்தார்.

    • அஸ்வினை ஜடேஜா தமிழில் பேசி வாழ்த்தியிருந்தார்.
    • அவரை ரவி இந்திரன் என்றும், அஸ்வினை ரவி சந்திரன் என்றும் புகழ்ந்திருந்தார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் நாணயத்தின இரு பக்கங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இவர்களது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

    சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை பாராட்டும் வகையில் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 500 தங்க காசுகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் காசோலை வழங்கியது.

    இந்த விழாவில் அஸ்வினை பலரும் பாராட்டி பேசினார். ஜடேஜா தமிழில் பேசி நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன் என தமிழில் பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில்தான் அஸ்வினிடமே, எனது தமிழ் எப்படி இருக்கிறது என்று கேட்டார் ஜடேஜா. அதற்கு அஸ்வின், ஜட்டு! உங்களுடைய செய்திகள் மூலம் என்னுடைய ஆச்சரியம் மற்றும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
    • விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.

    சென்னை:

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். மேலும் 100-வது டெஸ்டில் விளையாடி புதிய மைல் கல்லை தொட்டார். அஸ்வின் 100 டெஸ்ட்களில் 516 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    இதற்கிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.

    ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கும்ப்ளே, சி.எஸ்.கே. நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்ட னர்.

    விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீரரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடினமான விஷயம். 100 போட்டியில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனையாகும்.

    எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். அவரது புகழை வரலாறு சொல்லும். மிக சிறந்த சுழற்பந்து வீரர் சென்னையைச் சேர்ந்தவர் என்று வரலாறு கூறும் என்றார்.

    முன்னாள் சுழற்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அஸ்வினுக்கு வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது. அப்போது கும்ப்ளே பேசியதாவது:

    நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சிறந்தவர்களில் அஸ்வினும் ஒருவர். அவரது விக்கெட் எண்ணிக்கை சிறப்பானது. அவருக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் அமோகமான தொடர்பு இருக்கிறது. வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர். அவர் தனது 100-வது டெஸ்டை முன்பே விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது அவர் எப்போதும் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வின் கிளப் டி.என்.பி.எல். மற்றும் மாநில அணிக்கான தொடரில் விளையாடி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கூறினார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் வீடியோ பதிவு மூலம் அஸ்வினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    வீடியோ காலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு புதுமை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அஸ்வின் சுழற்பந்து வீச்சை முன்னோக்கி கொண்டு சென்றார். கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் சுழற்பந்து வீரர் பற்றிய நமது புரிதலையும், அறிவையும் அவர் முன்னோக்கி நகர்த்தி உள்ளார் என தெரிவித்தார்.

    இறுதியில், ஏற்புரை நிகழ்த்திய அஸ்வின், வாழ்நாள் முழுவதும் டோனிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
    • ரோகித் சர்மா விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து ஐ.சி.சி. வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் 2 இடங்கள் சரிந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிடுகிடுவென முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.

    • குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அஸ்வின் தனது 100-வது போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் மிரட்டினர். இருவரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது.

    குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மேலும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் இருந்து வெளியே வந்தனர். பொதுவாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பந்தை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி தூக்கி காண்பித்தவாற வெளியேறுவார்கள். அவரை சக வீரர்கள் கைத்தட்டி பாராட்டு பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    அதன்படி குல்தீப் யாதவ் வெளியே வர வேண்டும். ஆனால் இது அஸ்வினுக்கு 100-வது போட்டி என்பதால், நீங்கள் பந்தை தூக்கி காண்பித்து வெளியேறுங்கள் என அஸ்வினுக்கு அன்பு கட்டளையிட்டார். அத்துடன் பந்தை அஸ்வினிடம் தூக்கி போட்டார்.

    அதற்கு அஸ்வின் இல்லை... இல்லை... நீதான் ஐந்து விக்கெட் எடுத்தது. நீ சென்றால்தான் நன்றாக இருக்கும் என்று குல்தீப் யாதவிடமே பந்து மீண்டும் தூக்கிப் போட்டார். ஆனால் குல்தீப் யாதவ் நீங்கள்தான் செல்ல வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். அதற்கு அஸ்வின் உடன்படவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் பந்துடன் வெளியேறினார். இருவரின் இந்த தன்னலமற்ற வேண்டுகோளை ரசிகர்கள் பாராட்டினர்.

    • இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • இங்கிலாந்து அணியின் கிராலி அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்த்தார்.

    தர்மசாலா:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது.

    இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. 4 போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றார். தேவ்தத் படிக்கல் டெஸ்டில் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 5-வது இந்திய வீரர் ஆவார். ஏற்கனவே ரஜத் படிதார் துருவ் ஜூரல், சர்பிராஸ்கான், ஆகாஸ் தீப் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். காயம் அடைந்த ரஜத் படிதார் இடத்தில் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

    இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு மார்க்வுட் இடம் பெற்றார்.

    இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோக்கும் இன்று 100-வது டெஸ்டில் விளையாடினார்கள். 100-வது டெஸ்டில் இதுவரை 76 வீரர்கள் விளையாடி உள்ளனர்.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கிராவ்லி யும், பென் டக்கெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 14.2 ஓவர்களில் 50 ரன்னை தொட்டது.

    இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென்டக்கெட் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    அப்போது ஸ்கோர் 64 ஆக இருந்தது. அடுத்து ஆலி போப் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரியில் 50 ரன்னை தொட்டார். அவரது 14-வது அரை சதமாகும்.

    2-வது விக்கெட் ஜோடியையும் குல்தீப் யாதவே பிரித்தார். போப் 11 ரன்னில் அவுட் ஆனார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. கிராவ்லி 61 ரன்னில் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய குல்தீப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிராலி 79 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 29 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 0 ரன்னிலும் குல்தீப் ஓவரில் வெளியேறினார்.

    இதனையடுத்து அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அஸ்வினும் அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 57.4 ஓவரில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
    • அதிவேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கியது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

    இதனையொட்டி அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மைதானத்திற்குள் அழைத்துச் சென்றார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அஸ்வினுக்கு 100-வது போட்டியில் விளையாடுவதையொட்டி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100 என எழுத்தப்பட்ட இந்திய அணிக்கான தொப்பியை வழங்கினார்.

    பின்னர் அஸ்வின் மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும்போது, இரண்டு பக்கமும் வரிசையாக நின்று சக வீரர்கள் கவுரவித்தனர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு 37 வயதாகிறது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி இலங்கை அணிக்கெதிராக முதன்முறையாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். டி20 அணியில் ஜூன் 12-ந்தேதி ஜிம்பாப்வே அணிக்கெதிராக களம் இறங்கினார்.

    2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி டெல்லியில் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 156 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 35 முறை ஐந்து விக்கெட்டுகளும், 8 முறை 10 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதியும், டி20-யில் 2022-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதியும் கடைசியாக விளையாடியுள்ளார்.

    10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். அதிவேகமாக 350 (66 போட்டிகள்) விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றவர்.

    • ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • விக்கெட் வீழ்த்திய நாளில், உடனடியாக சென்னை திரும்பினார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

    ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் 2-வது நாள் ஆட்டத்தின்போது தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார். அனில் கும்ப்ளேவிற்குப் பிறகு 500 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    அந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் நீண்ட நேரம் தங்கவில்லை. உடனடியாக அவர் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக அஸ்வின் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

    அதன்பின் அதேடெஸ்டில் அஸ்வின் மீண்டும் இணைந்து விக்கெட் கைப்பற்றினார். ஆனால், தான் எதற்காக அவசரமாக சொந்த ஊர் சென்றேன் என அஸ்வின் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இது தொடர்பாக அஸ்வின் மனைவி பிரீத்தி வெளியிட்டுள்ள தகவல் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரையாக வெளியாகியுள்ளது.

    அதில் அஸ்வின் மனைவி ப்ரீத்தி கூறியிருப்பதாவது:-

    தனது கணவர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதும், செல்போனில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு குழந்தைகளுடன் பதில் அளித்துக் கொண்டிருந்தோம்.

    அப்போது திடீரென மாமியாரின் அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் நிலைகுலைந்து கிழே விழுந்தார். சிறிது நேரத்தில் நாங்கள் மருத்துமனையில் இருந்தோம். அந்த நேரத்தில் நாங்கள் அஸ்வினுக்கு சொல்ல வேண்டாம் என நினைத்தோம். ஏனென்றால், சென்னை- ராஜ்கோட் இடையிலான சிறந்த முறையிலான விமான சேவை கிடையாது.

    ஆகவே, நான் புஜாராவுக்கு போன் செய்தேன். அவருடைய குடும்பம் மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. அஸ்வின் விரைவாக சென்னை திரும்புவதற்கான ஒரு வழியை கண்டுபிடித்த உடன், நான் அஸ்வினுக்கு போன் செய்தேன். ஏனென்றால், ஸ்கேன் பரிசோதனை முடிந்த பிறகு அவரது மகன் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். போனில் பேசும்போது அவர் உடைந்து போனார்.

    அஸ்வின் சென்னைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், அணியின் உள்ள மற்ற அனைவருக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைய தினம் நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் தாயாரை அவர் பார்த்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். அவரது தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததும், நாங்கள் அவரை அணியில் இணைந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். அவர் ஒருபோதும் இதுபோன்ற போட்டியை விட்டுவிட விரும்பமாட்டார். அவருடைய அணிக்கு அவர் வெற்றியை தேடிக்கொடுக்காவிடில், தீவிர குற்ற உணர்வை கொண்டிருப்பார்.

    அந்த இரண்டு நாட்களில், பெற்றோருடன் அதிக நேரம் இருப்பதற்கான அவரது ஏக்கம் இப்போது அதிகமாக இருப்பதையும், அது வயது மற்றும் முதிர்ச்சி காரணமாக வருகிறது என்பதையும் உணர்ந்தேன்.

    இவ்வாறு பரீத்தி அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.
    • அதிகமாக 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சிறப்போடும் இருக்கிறார்.

    தரம்சாலா:

    டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், விரைவாக 500 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர், அதிகமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெரிய சிறப்போடு இருக்கிறார்.

    இந்நிலையில், தரம்சாலாவில் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னிடம் நிறைய பேர் வந்து உங்களுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை என்பது பற்றி பேசி இருக்கிறார்கள். எனக்கு வந்த ஏற்றத்தாழ்வுகள் எனக்கு நிறைய புரிதலை உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து நான் வெளியில் வந்து என்னை சமாதானம் செய்துகொண்டு விட்டேன்.

    கிரிக்கெட்டில் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த இடத்தில்தான் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு முக்கியமான நேரங்களில் வாய்ப்புகள் கிடைக்காத பொழுது, எல்லாமே அணியின் நன்மைக்காகத்தான் என்று என்னை நானே சமாதானம் செய்வேன்.

    5 நாட்கள் முடிவில் அணி வென்றால் டிரெஸ்சிங் ரூமில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அணியை விட என்னுடைய சுயநலமான ஆர்வத்தை பெரிதுபடுத்த முடியாது என தெரிவித்தார்.

    • களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
    • அஸ்வின் தனது X பக்கத்தில், "டேய் லார்ட் மாடே, போதும் டா" ன பதிவிட்டுள்ளார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பபந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை, 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 207 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    ஷர்துல் தாக்கூர் தனியொரு ஆளாக தமிழ்நாடு அணியிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச்செல்வதை பார்த்த அஸ்வின் தனது X பக்கத்தில், "டேய் லார்ட் மாடே, போதும் டா" ன பதிவிட்டுள்ளார். 


    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • இங்கிலாந்தின் 9-வது பேட்ஸ்மேன் ராபின்சன் அரைசதம் அடித்தார்.
    • ஜடேஜா கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து 57 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அதன்பின் ஜோ ரூட்- போர்ஸ்டோவ் ஜோடி தாக்குப்பிடித்து 57 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஜோ ரூட் உடன் பென் போக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டது.

    ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் நிதானமாக விளையாட ராபின்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராபின்சன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. ராபின்சனை ஜடேஜா வீழ்த்தினார்.

    இதே ஓவரில் பஷீரையும் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் ஆண்டர்சனை வீழ்த்த இங்கிலாந்து 104.5 ஓவரில் 353 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×