search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஷிங்டன் சுந்தர்"

    • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில், 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில், 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிகபடச்சமாகவே ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 50 விக்கெட்டுக்குள் கடந்த ஒரே பந்துவீச்சாளராக மாறி அசத்தியுள்ளார். நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய் கிஷோர் 6 முறை 4 விக்கெட்டுகளும், 3 முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 53 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

    • களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
    • அஸ்வின் தனது X பக்கத்தில், "டேய் லார்ட் மாடே, போதும் டா" ன பதிவிட்டுள்ளார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பபந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை, 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 207 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    ஷர்துல் தாக்கூர் தனியொரு ஆளாக தமிழ்நாடு அணியிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச்செல்வதை பார்த்த அஸ்வின் தனது X பக்கத்தில், "டேய் லார்ட் மாடே, போதும் டா" ன பதிவிட்டுள்ளார். 


    • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை, 322 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 176 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    மும்பை:

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். என்.ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரதோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 48 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதானமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    சென்னை:

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 33 வித்தியாசத்தில் சவுராஸ்டிராவை வீழ்த்தி ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது.

    மற்ற கால்இறுதி போட்டிகளில் மத்தியபிரதேசம் 4 ரன்னில் ஆந்திராவையும், விதர்பா 127 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவையும் தோற்கடித்தன. பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

    அரைஇறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிர தேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.

    மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து கொள்கிறார். அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்

    இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார். அவர் இந்திய அணியில் இருந்து 2-வது டெஸ்டுக்கு பிறகு நீக்கப்பட்டார்.

    • விஜயகாந்த் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • இந்திய அணி வீரரும் தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர் மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய அணி வீரரும் தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர் மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் அனைவரும் உங்களை மிஸ் பண்ணுவாங்க. RIP என பதிவிட்டிருந்தார்.

    விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவரது உடல் மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்ததாக தகவல்
    • பேக்-அப் வீரராக வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டுள்ளார்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த போட்டியின்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவரது காயத்தின் வீரியம் குறித்து சரியான தகவல் வெளியாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அக்சார் பட்டேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்படும் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாகவும், உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளதால் பிசிசிஐ கவலை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர், கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
    • அந்த அணி இரு வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

    அந்த அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு தொடரில் அந்த அணி இரு வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
    • வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.

    இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் வாஷிங்டன் ரன் அவுட் ஆனதற்கு நானே காரணம் என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஏனெனில் மைதானத்தில் உள்ள சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் நான் இன்று பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.


    வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன். வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்தது முற்றிலுமாக என்னுடைய தவறுதான். அது கண்டிப்பாக ரன் கிடையாது. ஆனால் நான் பந்து எங்கு சென்றது என்று கவனிக்காமலே ஓடி வந்து அவர் ஆட்டமிழக்க காரணமாக அமைந்தேன்.

    இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து அதிக அளவு திரும்பியது. எனவே பொறுமையாக இருந்து இறுதிவரை அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று இறுதி நேரத்தில் ஹார்டிக் பாண்டியா என்னிடம் வந்து கண்டிப்பாக இந்த பந்தில் உன்னால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும் என்று எனக்கு தைரியத்தை அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
    • டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

    அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்த அணியின் வெற்றிக்காக போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி வீரர்கள் யாரும் படைத்திடாத தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 5-வது ஓவரில் மிரட்டலை கொடுத்த பின் ஆலனை 35 (23) ரன்களில் அவுட்டாக்கிய அவர் அடுத்து வந்த மார்க் சாப்மேன் கொடுத்த கேட்ச்சை சூப்பர் மேன் போல தாவி பிடித்து டக் அவுட்டாக்கினார். அத்துடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் வெறித்தனமாக போராடிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    இதற்கு முன் தனது கேரியரில் 12 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வெறும் 47 ரன்கள் மட்டும் எடுத்த அவர் இந்த ஒரே போட்டியில் 50 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். அதை விட இப்போட்டியில் மொத்தமாக 2 விக்கெட், 1 கேட்ச், 50 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தது 50 ரன்கள், 1 விக்கெட், 1 கேட்ச் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததே கிடையாது. இதுவரை ஜடேஜா கேரியரில் அரை சதம் அடித்ததில்லை. அதே போல் பேட்டிங் பந்து வீச்சில் அசத்தினாலும் யுவராஜ் சிங், பாண்டியா ஆகியோர் இதற்கு முன் கேட்ச் பிடித்ததில்லை. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தரை நினைத்து தமிழக ரசிகர்கள் மிகவும் பெருமை அடைகிறார்கள்.

    • ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது.
    • டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது.

    ராஞ்சி:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது வாஷிங்டன் சுந்தர் கேள்வி ஒன்றுக்கு கடுப்பாக்கி பதிலளித்தார்.

    இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர்:-

    இது ஏதேனும் ஒரு போட்டியில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது. நாங்கள் செய்த தவறை சரி பார்ப்போம். ஆனால் என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு போட்டி எப்போதாவது நிகழும். நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும்.

    ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் எப்போது ஆவது விளையாட நேரிடும். எங்கள் அணி வீரர்கள் இதுபோன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.

    வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ஏன் நியூசிலாந்து அணி ராய்ப்பூரில் 108 ரன்கள் ஆட்டம் இழந்தார்களே?

    இதன் காரணமாக நியூசிலாந்து அணி டாப் ஆர்டரை மாற்றினார்களா என்ன? இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது போன்ற மோசமான நாட்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். விளையாட்டில் எந்த அணியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஒரே நாளில் 22 வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது. நாங்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு தான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறோம்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

    ×