search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumble"

    • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
    • விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.

    சென்னை:

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். மேலும் 100-வது டெஸ்டில் விளையாடி புதிய மைல் கல்லை தொட்டார். அஸ்வின் 100 டெஸ்ட்களில் 516 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    இதற்கிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.

    ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கும்ப்ளே, சி.எஸ்.கே. நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்ட னர்.

    விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீரரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடினமான விஷயம். 100 போட்டியில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனையாகும்.

    எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். அவரது புகழை வரலாறு சொல்லும். மிக சிறந்த சுழற்பந்து வீரர் சென்னையைச் சேர்ந்தவர் என்று வரலாறு கூறும் என்றார்.

    முன்னாள் சுழற்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அஸ்வினுக்கு வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது. அப்போது கும்ப்ளே பேசியதாவது:

    நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சிறந்தவர்களில் அஸ்வினும் ஒருவர். அவரது விக்கெட் எண்ணிக்கை சிறப்பானது. அவருக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் அமோகமான தொடர்பு இருக்கிறது. வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர். அவர் தனது 100-வது டெஸ்டை முன்பே விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது அவர் எப்போதும் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வின் கிளப் டி.என்.பி.எல். மற்றும் மாநில அணிக்கான தொடரில் விளையாடி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கூறினார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் வீடியோ பதிவு மூலம் அஸ்வினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    வீடியோ காலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு புதுமை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அஸ்வின் சுழற்பந்து வீச்சை முன்னோக்கி கொண்டு சென்றார். கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் சுழற்பந்து வீரர் பற்றிய நமது புரிதலையும், அறிவையும் அவர் முன்னோக்கி நகர்த்தி உள்ளார் என தெரிவித்தார்.

    இறுதியில், ஏற்புரை நிகழ்த்திய அஸ்வின், வாழ்நாள் முழுவதும் டோனிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. சென்னையை சேர்ந்த 36 வயதான அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். நேற்றும் அஸ்வின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் அவர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    உலகின் முதல் வரிசை பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த டெஸ்டில் 12 விக்கெட் (முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 7) கைப்பற்றினார்.

    அஸ்வின் 8-வது முறையாக டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்தார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.

    அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    முரளிதரன் (இலங்கை) 22 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 10 தடவையும், ஹேட்லி (நியூசிலாந்து), ஹெராத் (இலங்கை) தலா 9 முறையும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.

    அஸ்வின் ஒரு இன்னிங்சில் 34-வது தடவையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் ஹெராத்துடன் அவர் இணைந்தார்.

    முரளிதரன் 67 முறையும், வார்னே 37 தடவையும், ஹேட்லி 36 முறையும், கும்பளே 35 தடவையும் ஒருஇன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர். இந்த வரிசையில் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் அஸ்வின் 6-வது தடவையாக இரண்டு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். முரளிதரன் (11), ஹெராத் (8) ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் இருக்கிறார்.

    அஸ்வின் 2-வது இன்னிங்சில் 71 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசில் இந்திய வீரர்களின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இஷாந்த் சர்மா 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 131 ரன் கொடுத்து 12 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும்.
    • இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

    * ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 25-வது முறையாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கும்பிளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து அவருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். சொந்த மண்ணில் இந்த வகையில் இவர்களை விட அதிகமாக இலங்கையின் முரளிதரன் 45 முறையும், ரங்கனா ஹெராத் 26 முறையும் 5 விக்கெட் வீழ்த்தி முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    * நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 91 ரன்னில் சுருண்டது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு அந்த அணி 2004-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் 93 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது. அத்துடன் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா எடுத்தது டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 1981-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணி 83 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

    * ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும்.

    * நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஆஸ்திரேலிய வீரர்களும், 2-வது டெஸ்டில் 6 ஆஸ்திரேலிய வீரர்களும் என மொத்தம் 10 பேர் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டம் இழந்தனர். ஒரு டெஸ்ட் போட்டியில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆஸ்திரேலியா இழந்த அதிகபட்ச விக்கெட் இதுவாகும். இதற்கு முன்பு அந்த அணி 2001-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் (கொல்கத்தா), 2022-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டிலும் (காலே) தலா 9 விக்கெட்டுகளை எல்.பி.டபிள்யூ. முறையில் பறிகொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    * இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் 49 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரரின் அதிகபட்ச ரன்னாகும். அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

    பெர்த் டெஸ்டில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது ஆச்சரியம் அளித்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே கூறியுள்ளார். #kumble

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    4 போட்டி கொண்ட தொடரில் அடிலெய்வில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்குகிறது.

    பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் காயம் காரணமாக இந்தியாவின் முதன்மை வீரர் அஸ்வின் விளையாடவில்லை. பெர்த் ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டதால் இந்திய அணி 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கவில்லை.

    ஆனால் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதனால் பெர்த் டெஸ்டில் இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும் என்று கருத்து எழுந்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றே கருதுகிறேன். எல்லா சூழ்நிலையிலும் தாக்குதல் பந்தவீச்சு தேவைப்படும்.

    ஆடுகளம் வேகப்பந்துக்கு நன்கு ஒத்துழைத்தால் 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். அப்படி இல்லையென்றால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை.

    இந்திய அணி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்று இருக்கிறது. தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி சுழற்பந்துக்கு திணறுகிறது.

    இதனால் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும். ஆனால் பெர்த் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியது ஆச்சரியம் அளித்தது.

    அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாமல் போய் விட்டது. ஆனால் குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இளம் வீரர்.

    ஏற்கனவே அவரது பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி உள்ளனர். எனவே குல்தீப் யாதவை பரிசீலித்து இருக்கலாம் என்றார். #kumble

    ×