search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gilchrist"

    • தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும்.
    • தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும்

    இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால்,ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்ற விவாதம். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட் க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்டுகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்,ரிஷப் பண்ட் க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இருவரில் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது ;

    ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு அணிக்கு என்ன கொண்டு வருகிறார்கள், தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும். அவர் மிகவும் அருமையான டச் கேமைக் கொண்டுள்ளார்.என தெரிவித்துள்ளார்.

    பெர்த் டெஸ்டில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது ஆச்சரியம் அளித்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே கூறியுள்ளார். #kumble

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    4 போட்டி கொண்ட தொடரில் அடிலெய்வில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்குகிறது.

    பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் காயம் காரணமாக இந்தியாவின் முதன்மை வீரர் அஸ்வின் விளையாடவில்லை. பெர்த் ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டதால் இந்திய அணி 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கவில்லை.

    ஆனால் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதனால் பெர்த் டெஸ்டில் இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும் என்று கருத்து எழுந்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றே கருதுகிறேன். எல்லா சூழ்நிலையிலும் தாக்குதல் பந்தவீச்சு தேவைப்படும்.

    ஆடுகளம் வேகப்பந்துக்கு நன்கு ஒத்துழைத்தால் 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். அப்படி இல்லையென்றால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை.

    இந்திய அணி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்று இருக்கிறது. தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி சுழற்பந்துக்கு திணறுகிறது.

    இதனால் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும். ஆனால் பெர்த் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியது ஆச்சரியம் அளித்தது.

    அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாமல் போய் விட்டது. ஆனால் குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இளம் வீரர்.

    ஏற்கனவே அவரது பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி உள்ளனர். எனவே குல்தீப் யாதவை பரிசீலித்து இருக்கலாம் என்றார். #kumble

    ஆஸ்திரேலியாவை வீழ்த்த கோலிக்கு வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். #AUSvIND #ViratKohli

    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதன் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.

    இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த விராட் கோலி மட்டும் போராடினால் போதாது. சக வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை போன்றே வீராட்கோலி தற்போது 4 டெஸ்டிலும் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் கோலியுடன் சேர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட வேண்டும்.

    கோலியுடன் மற்ற வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்து, பந்து வீச்சும் நன்றாக அமைந்தால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்த இயலும்.

    இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    2014-ம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரை டோனி தலைமையிலான அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்த தொடரில் விராட்கோலி 694 ரன்களை (சராசரி 86.50) குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #ViratKohli

    ×