search icon
என் மலர்tooltip icon

    மேற்கிந்தியத் தீவு

    • கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
    • குட்டி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் விபத்து நடந்துள்ளது.

    ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளது.

    தி குட் ஜெர்மன் (The Good German) என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008-ல் ஆக்ஷன்-காமெடி படமான ஸ்பீடு ரேஸர் (Speed Racer) படத்தில் நடத்தியிருந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.

    ஆலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமான என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆரம்ப காலத்தில் டி.வி. தொடரில் நடித்தது பிரபலமானார். அதன்பின் ஆலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 206 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் டி.ஆர்.எஸ். முறைப்படி நிர்ணயித்த இலக்கை எட்டியது.

    பிரிட்ஜ்டவுன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. பென் டெக்கெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 45 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் முறைப்படி 34 ஓவரில் 188 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணியின் கெய்சி கார்டி சிறப்பாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆலிக் அதான்சே 45 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியாக ஆடி 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 31.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாகினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.

    • 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீசும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் புரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்கக்கூடாது என்பதற்காக இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதாவது:

    இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும். அதனால் இந்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.

    இந்த டி20 தொடரில் 7 பேட்ஸ்மேன்கள் போதும் என்ற முடிவுடன் தான் நாங்கள் களமிறங்கினோம். இதன்மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தோம்.

    ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை இருக்காது.

    சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்கள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விளையாடக் கூடியவர்கள்.

    சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள். இதன்மூலம் மற்ற வீரர்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

    பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என பாண்ட்யா கடந்த போட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

    • 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், குல்தீப் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, சஹல் 34 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (26 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை ஹசரங்கா (30 போட்டிகள்) உடன் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, இந்திய அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு திலக் வர்மா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அரை சதம் கடந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இந்தியா 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 49 ரன்னும், பாண்ட்யா 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, இந்திய அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பு.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இந்த போட்டியின்போது நடுவரை விமர்சித்த குற்றத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான நிகோலஸ் பூரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    போட்டியின்போது, ஐசிசி விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    கயானா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 67 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், எங்கள் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் ஆடியிருக்கலாம். 160 அல்லது 170 ரன்கள் சிறந்த ரன்னாக இருந்திருக்கலாம். பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீசில் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.

    கயானா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அகீல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக வீசினார். முதல் பந்தில் பிராண்டன் கிங்கை அவுட்டாக்கினார். தொடர்ந்து 4வது பந்தில் ஜான்சன் சார்லசை வெளியேற்றினார். கைல் மேயர்ஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரனுடன் ரோவ்மன் பாவெல் ஜோடி சேர்ந்தார். பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்த நிலையில் பாவெல் 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து பூரன் 67 ரன்னில் வெளியேறினார்.

    16-வது ஓவரை சஹல் வீசினார். முதல் பந்தில் ஷெப்பர்ட் ரன் அவுட்டானார். 4-வது பந்தில் ஹோல்டர் ஸ்டம்ப்ட் அவுட்டானார். 6-வது பந்தில் ஹெட்மயர் எல் பி டபிள்யூ முறையில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 3 ரன்னும், 18வது ஓவரில் 9 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது.

    கயானா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    ஐந்து 20 ஓவர் போட்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

    ×