என் மலர்
நீங்கள் தேடியது "Caribbean Premier League"
- கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசினார் பொல்லார்டு.
- இந்தியாவின் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் அடித்துள்ளார்.
செயின்ட்லூசியா:
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 13-வது சீசன் நடந்து வருகிறது.
செயின்ட்லூசியாவில் நடந்த போட்டியில் டிரிபாகோ அணி, செயின்ட்லூசியா அணியை சந்தித்தது. முதலில் ஆடிய டிரிபாகோ 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய செயின்ட் லுசியா 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன் வித்தியாசத்தில் டிரிபாகோ அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 29 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் விளாசிய டிரிபாகோ அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசிய 2-வது வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்டு.
பொல்லார்டு இதுவரை 128 போட்டியில் 203 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.
ஏற்கனவே செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் எவின் லீவிஸ் 200 சிக்சர் அடித்திருந்தார்.
ஒட்டுமொத்த டி 20 லீக் வரலாற்றில் இரு அணிகள் சார்பில் தலா 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் பொல்லார்டு. இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் (189 போட்டி) அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த டி 20 வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு (14,562 ரன், 1056 சிக்சர்) பிறகு அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரரானார் பொல்லார்டு (13,181 ரன், 941 சிக்சர்).
கெயில் 1056 சிக்சர்கள் உள்பட 14,562 ரன்கள் குவித்துள்ளார். இவரை தொடர்ந்து பொல்லார்டு 941 சிக்சர் உள்பட 13181 ரன்கள் அடித்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து களமிறங்கிய பார்புடா பால்கன்ஸ் 15.2 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆன்டிகுவா:
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற (இந்திய நேரப்படி) 9-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்சை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்களும், ஹெட்மேயர் 65 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆன்டிகுவா அணி இம்ரான் தாஹிரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
இதனால் 15.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கயானா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன் என்ற உலக சாதனையை இம்ரான் தாஹிர் (46 வயது 148 நாட்கள்) படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் மலாவி கேப்டன் மொவாசம் அலி பெய்க் தனது 39 வயதில் கேமரூனுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
- முதலில் விளையாடி கயானா 138 ரன்களே சேர்த்தது.
- செயின்ட் லூசியா 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ்- இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய கயானா அணியால் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அநத அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 22 ரன்களும், பிரிட்டோரியஸ் 25 ரன்களும் சேரத்தனர். செயின்ட் லூசியா அணி சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா அணி களம் இறங்கியது. ராஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் விளாச செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் நடத்தி வருகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வீரர்களை வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஏதாவது ஒரு அணி இவரை ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 4-ந்தேதியில் இருந்து அக்டோபர் 12-ந்தேதி வரை நடக்கிறது.

Played ✅
— TrinbagoKnightRiders (@TKRiders) September 17, 2018
Fought ✅
Won ✅
REPEAT🏆🏆🏆#PlayFightWinRepeat#TimeForARepeat#GAWvTKR#CPL18#CPLFinalpic.twitter.com/gW8UjkToyS

ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. இதனடிப்படையில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயினிட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.

பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி டிரினாடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.
டாஸ் வென்ற கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி வெயின் பிராவோ அணி முதலில் களம் இறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 6 ரன்னிலும், கிறிஸ் லின் 18 ரன்னி்லும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கொலின் முன்றோ (50 பந்தில் 76 ரன்கள்- நாட்அவுட்), பிராண்டன் மெக்கல்லம் (33 பந்தில் 35), வெயின் பிராவோ (11 பந்தில் 37 ரன்கள்- நாட்அவுட்- 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிராவோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிறிஸ் கெய்ல் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எவின் லெவிஸ் 52 ரன்கள் சேர்த்தார்.

கொலின் முன்றோ
அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி மூலம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் டிரிடென்ட்ஸ் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ் கெய்லை வீழ்த்தினார்.
அதன்பின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசினார். அவர் பந்தை செயின்ட் கிட்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் தொடக்கூட முடியவில்லை. 23 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.

இதனால் கடைசி பந்திலும் ரன் விட்டுக்கொடுக்காமல் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் நான்கு ஓவரில் 3 மெய்டனுடன் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து (4-3-1-2) 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு ஓவர் ஸ்பெல்லில் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த வருடம் இறுதியில் நடைபெறும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரிவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கரிபிரியன் பிரீமியர் லீக் தொடருக்கு சென்றால் சசக்ஸ் அணிக்காக அவர் விளையாட முடியாது.

இந்நிலையில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகி, தொடர்ந்து சசக்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இன்னும் ஏழு போட்டிகள் உள்ளன. ரஷித் கான் தொடர்ந்து விளையாட இருப்பதால் இங்கிலிஷ் கவுன்ட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிக குறைவான லெவல் தொடர்களிலும், வெளிநாட்டு லீ்க் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

முதன்முதலாக கனடா குளோபல் டி20 லீக்கில் விளையாடினார். அதன் தற்போது கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்த அணியில் இடம்பிடித்திருந்தது வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகியதால் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 155 டி20 போட்டிகளில் விளையாடி 3124 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.03 ஆகும்.
விரைவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் இடம்பித்துள்ள ஜமைக்கா தல்லாவாஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.
இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒரு வருடம் தடைக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பிய பிறகு, கேப்டன் பதவி கிடைத்திருப்பது சிறந்த உணர்வாக உள்ளது. ஒரு வீரராக மட்டுமல்ல, ஜமைக்கா தல்லாவாஸ் கேப்டனாக தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியை பெற்றுள்ளோம். வெறும் பெயரை மட்டும் வைத்து அணியில்லை. எப்படி விளையாடுகிறார்கள். விரைவாக ஆட்டத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அணி. நாங்கள் ஏராளமான ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளோம் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணியில் இடம்பிடித்துள்ள 8 வீரர்களால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.






